99.9% தூய வெள்ளி.. பிரதமர் மோடி வெளியிட்ட ராஜேந்திரனின் நினைவு நாணயம்.. இத்தனை சிறப்புகளா?
அரியலூர்: பிரதமர் நரேந்திர மோடி ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிட்டுள்ளார். அந்த நினைவு நாணயத்தின் சிறப்புகள் என்ன என்பது தொடர்பாக இந்த செய்தியில் பார்க்கலாம்.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாகத் தமிழ்நாடு வந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையத்தைத் திறந்து வைத்த அவர், இன்று அரியலூர் மாவட்ட கங்கைகொண்ட சோழபுரம் வந்தார். சோழீஸ்வரரை வழிபட்ட அவர், ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழாவான ஆடி திருவாதிரை நாளில் பங்கேற்றார். மோடியின் வருகை காரணமாக இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதன்பின் ராஜேந்திர சோழன் மற்றும் ராஜராஜன் சோழனுக்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதனிடையே ராஜேந்திர சோழனின் நினைவு நாணயம் ஒன்றையும் வெளியிட்டார். இந்த நாணயம் ரூ.1,000 மதிப்பை கொண்டதாகும். அதன் முன்புறம் இந்தியாவின் இறையாண்மையை அடையாளப்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
தமிழில் வாய்மையே வெல்லும் என்று பொருள்படும் சத்யமேவ ஜெயதே என்று வாகசம் பொறிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலாக அசோக சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இடதுபுறத்தில் தேவநாகரியில் பாரத் என்றும், வலதுபுறத்தில் இந்தியா என்று பதிக்கப்பட்டுள்ளது. அசோக சின்னத்திற்குக் கீழ், ரூபாய்க்கான அடையாளமும், ஆயிரம் என்ற எண்ணும் பொறிக்கப்பட்டுள்ளன.
அதேபோல் நாணயத்தின் பின்புறம் பேரரசர் ராஜேந்திர சோழன் 1ல் கடற்படையை காட்சிப்படுத்தும் வகையில், நாணயத்தின் மையத்தில் உருவகம் பதிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பேரரசர் ராஜேந்திர சோழன் 1ன் ஆயிரம் ஆண்டுகள் கடற்படை பயணம் என்று ஆங்கிலம் மற்றும் தேவநாகரி வரி வடிவில் பொறிக்கப்பட்டுள்ளன.
இந்த நாணயம் வட்ட வடிவில் 44 மிமீ உள்ளது. அதேபோல் 99.9 சதவிகிதம் தூய வெள்ளியால் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் இதன் எடை 40 கிராமமாகும். அதேபோல் பிரதமர் மோடி, உலகம் முழுவதும் நீர் மேலாண்மைக்கு முன்னோடி சோழர்கள். கங்கையின் மகத்துவத்தை உணர்ந்தவர் ராஜேந்திரன். காவிரிக் கரைக்கு கங்கைக் கரையில் இருந்து வந்துள்ளேன். நான் காசியின் பிரதிநிதி, கங்கையின் மகன், காவிரிக் கரைக்குக் கங்கை நீரைக் கொண்டு வந்துள்ளேன் என்று தெரிவித்தார்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
சவால்களுக்கு தயாராக வேண்டும்.. நீண்ட காலத்திற்கு தாக்கம் இருக்கும்.. ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேச்சு -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications