பள்ளிக்கூடத்தை எப்ப திறக்கலாம்.. ஒரு ஐடியா கொடுங்க.. மாநிலங்களைக் கேட்கும் மத்திய அரசு!
சென்னை: கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டுள்ள பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்து மத்திய அரசுக்கு தமிழக கல்வித் துறை இன்று பதில் அளிக்க இருப்பதாக தெரிகிறது.
கொரோனா நோய் இந்தியாவில் பரவத் தொடங்கியதும் கடந்த மார்ச் 16-ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுவிட்டது. சுமார் 4 மாதங்களாகியும் மாணவர்கள் பள்ளிச் செல்ல முடியாமல் வீடுகளில் ஆன்லைன் வகுப்பில் படித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் சில பெற்றோர் அடுத்த ஆண்டு ஜனவரியில் பள்ளிகளை திறக்கலாம் என்றும் இன்னும் சிலர் குறைவான மாணவர்களை சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு அனுப்பலாம் என்றும் ஆலோசனைகளை கூறிவருகிறார்கள்.
இந்த நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கல்வித் துறை செயலாளர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் பெறறோர்களிடம் பள்ளிகள் திறப்பு குறித்து கருத்துக் கேட்டு அனுப்ப வேண்டும்.
அதில் பள்ளிகள் மீண்டும் திறக்க வசதியான காலம் எது, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய மாதங்களில் எப்போது திறக்கலாம், மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் பள்ளிகளில் செய்ய வேண்டியவை எவை, பெற்றோரின் எதிர்பார்ப்பு என்ன ஆகியவை குறித்து கருத்துகளை கேட்டு [email protected], [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு ஜூலை 20-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அணு ஆயுத போர்க்கப்பல்.. அந்தமானுக்கு வருகிறது அமெரிக்காவின் "கில்லர் ஷிப்".. இந்தியா மாஸ்டர் பிளான்!
இதை வைத்து பெற்றோரிடம் தமிழக கல்வித் துறை கருத்துகளை கேட்டுள்ளது. இவற்றை தொகுத்து மத்திய அரசுக்கு இன்று அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசு மட்டுமில்லை, பெற்றோரும் நேரடியாக தங்கள் கருத்துகளை இந்த ஈமெயில் முகவரிக்கு தெரிவிக்கலாம்.
ஆந்திரா செப்டம்பர் 5-ஆம் தேதியும் கேரளா ஆகஸ்ட் 31-க்கு பிறகும் கர்நாடகம் செப்டம்பர் 1-ஆம் தேதியும் பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளதாக கடந்த 15-ஆம் தேதி மாநில கல்வித் துறை செயலாளர்களுடனான ஆலோசனையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் தமிழகமும் தெலுங்கானாவும் மட்டுமே இதுகுறித்து முடிவு செய்யவில்லை.