நடுங்கிய சென்னை.. ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி கொன்றது ஏன்? கைதான 8 பேர் யார் யார்? பின்னணி
சென்னை: சென்னை பெரம்பூரில் நேற்று பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்மகும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி உள்பட 8 பேர் சரணடைந்துள்ளனர். இந்நிலையில் தான் அவர்களின் பெயர் விபரம் மற்றும் பின்னணி குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று சென்னையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனால் சென்னையில் பதற்றம் நிலவி வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலையால் கடும் கண்டனம் தெரிவித்த பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி இன்று சென்னை வந்து அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்க உள்ளார்

உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் மாயாவதி. இவர் பகுஜன் சமாஜ் கட்சியை நடத்தி வருகிறார். அந்த கட்சியின் தேசிய தலைவராக மாயாவதி உள்ளார். இந்நிலையில் தான் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவராக ஆம்ஸ்ட்ராங் இருந்தார். இவருக்கு வயது 52.
இவர் சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். நேற்று மாலையில் அவர் தனது வீட்டின் அருகே வழக்கம்போல் நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். இந்த வேளையில் பைக்குகளில் ஜோமோட்டோ உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் போல் வந்த கும்பல் அவரை அரிவாளால் வெட்டியது.
ஆம்ஸ்ட்ராங்கை மீட்க முயன்ற நண்பர்களிடம் அரிவாளை காட்டி அந்த கும்பல் மிரட்டியது. இதனால் அவர்களால் ஆம்ஸ்ட்ராங் அருகே நெருங்க முடியவில்லை. இதையடுத்து ஆம்ஸ்ட்ராங்கை கொடூரமாக வெட்டிய கும்பல் அங்கிருந்து பைக்குகளில் ஏறி சென்றது. இதில் ரத்த வெள்ளத்தில் ஆம்ஸ்ட்ராங் சரிந்து விழுந்து உயிருக்கு போராடினார். இதையடுத்து அவரை அவரது நண்பர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங்கை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. ஆம்ஸ்ட்ராங் சென்னையை பொறுத்தவரை தலித் தலைவராக அறியப்படுகிறார். அதோடு இவர் முன்னாள் கவுன்சிலரும் கூட. இவருக்கு பெரம்பூர் பகுதியில் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. இதனால் அவரது கொலையை கண்டித்து நேற்று இரவே சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியினர் மற்றும் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதனால் சென்னையில் நேற்று இரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர். தற்போது ஆம்ஸ்ட்ராங்கின் உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணிக்கு பிறகு அவரது உடல் பிரதே பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதற்கிடையே தான் தொடர்ந்து ஆதரவாளர்கள், கட்சியினர் குவிந்து வருகின்றனர். இதனால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முன்னதாக ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி கொன்ற பிறகு மர்மகும்பல் பைக்குகளில் வேகமாக செல்லும் காட்சிகள் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்தது. அதனை வைத்து போலீசார் அவர்களை தேடிவந்தனர். கொலையாளிகளை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணையை தொடங்கினர்.
இதற்கிடையே தான் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி கொலை செய்துள்ளதாக 8 பேர் நேற்று சென்னை அண்ணாநகர் போலீசில் சரணடைந்துள்ளனர். இதையடுத்து சென்னை அண்ணாநகர் போலீசார் அவர்கள் 8 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்களின் பெயர்கள் பொன்னை பாலு (வயது 39), மணிவண்ணன் (25), திருவேங்கடம் (33), திருமலை (45),அருள் (33), ராமு (38), சந்தோஷ், செல்வராஜ் (48) என்பது தெரியவந்தது. இதில் பொன்னை பாலு என்பவர் ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பியாவார். இவர் தலைமையில் தான் கொலை நடந்துள்ளது
இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளனர். அதாவது ரவுடி ஆற்காடு சுரேஷ் சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு தொடர்பு உள்ளதாக ஆற்காடு சுரேஷ் தரப்பு நம்புகிறது. இதனால் ஆம்ஸ்ட்ராங்கை பழிவாங்க அவர்கள் திட்டமிட்டனர்.இந்நிலையில் தான் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு தலைமையிலான கும்பல் திட்டமிட்டு ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி கொன்றோம் என்று அவர்கள் போலீசில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 8 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப்












Click it and Unblock the Notifications