ஆளுநர் ரவியை ரஜினி சந்தித்த உடனே.. ஆளும் திமுக எடுத்த மூவ்.. நேரடியாக களமிறங்கும் முதல்வர் ஸ்டாலின்?
சென்னை: நேற்று நடிகர் ரஜினிகாந்தை ஆளுநர் ஆர்.என் ரவி சந்தித்த சில நிமிடங்களில் தமிழ்நாடு அரசு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. திமுக அரசு வெளியிட்ட இந்த அறிவிப்பு ஆளுநருக்கு எதிரான முக்கியமான மூவாக பார்க்கப்படுகிறது.
Recommended Video
ஆளுநர் ஆர். என் ரவியை முதல்வர் ஸ்டாலின் நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பு தமிழ்நாடு அரசியலில் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசியலில் இருந்து கடந்த ஒன்றரை வருடமாக ஒதுங்கி இருந்த ரஜினிகாந்த் மீண்டும் லைம் லைட்டிற்கு வந்துள்ளார். நேற்று இருவருக்கும் இடையிலான சந்திப்பு 20-30 நிமிடங்கள் நடைபெற்றது.
கடந்த 3 நாட்களுக்கு முன் டெல்லி சென்ற ரஜினிகாந்த் அங்கு பல்வேறு பாஜக தலைவர்களை சந்தித்தார். இந்த நிலையில் நேற்று அவர் ஆளுநர் ரவியை சந்தித்தது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது.

என்ன பேசினார்கள்?
இந்த சந்திப்பு முடிந்து செய்தியாளர்களை சந்தித்த இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. இருந்தாலும் இதில் அரசியல் பேசினோம். ஆனால் அதை பற்றி உங்களிடம் சொல்ல முடியாது. தமிழ்நாட்டில் இருக்கும் ஆன்மீக உணர்வு ஆளுநர் ரவிக்கு பிடித்து இருக்கிறது. . தமிழ்நாட்டின் நன்மைக்காக நான் என்ன செய்யவும் தயாராக இருக்கிறேன் என்று அவர் என்னிடம் தெரிவித்தார். நான் மீண்டும் அரசியலுக்கு வர வாய்ப்பு இல்லை என்று கூறினார்.

என்ன நடந்தது?
இந்த நிலையில்தான் நேற்று நடிகர் ரஜினிகாந்தை ஆளுநர் ஆர்.என் ரவி சந்தித்த சில நிமிடங்களில் தமிழ்நாடு அரசு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் துணை வேந்தர்கள் மாநாடு நடக்கும் என்று நேற்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன் முடி அறிவித்தார். திமுக அரசு வெளியிட்ட இந்த அறிவிப்பு ஆளுநருக்கு எதிரான முக்கியமான மூவாக பார்க்கப்படுகிறது. வருகிற 17-ந் தேதி பல்கலைக்கழக துணை வேந்தர்களின் மாநாடு சென்னையில் நடக்க உள்ளது.

மாநாடு
கடந்த மே மாதம் ஊட்டியில் துணைவேந்தர்களின் 2 நாள் மாநாட்டை நடத்தினார் ஆளுநர் ரவி. தமிழ்நாடு அரசு ஆளுநரின் இந்த தனிப்பட்ட மாநாட்டை விரும்பவில்லை. இந்த மாநாட்டில் தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். ஆனால் இணை வேந்தர் என்ற முறையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன் முடிக்கு இது தொடர்பான அழைப்பு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து ஆளுநருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழ்நாடு பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வரை அறிவிக்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

ஆளுநர்
அதாவது ஆளுநரை இந்த பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு முதல்வரை வேந்தராக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த மசோதாவை ஆளுநர் ரவி இன்னும் டெல்லிக்கு அனுப்பவில்லை. இதனால் நிறைவேற்றப்பட்ட மசோதா கிடப்பில் இருக்கிறது. இந்த நிலையில்தான் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் துணை வேந்தர்கள் மாநாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்க உள்ளது. மாநில அரசின் உரிமையை பயன்படுத்தி மாநாடு நடக்கிறது.

சட்டம்
சட்டப்படி இப்போதும் ஆளுநர்தான் பல்கலைக்கழக வேந்தர். ஆனால் அவரை அழைக்காமல் இந்த கூட்டத்தை நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. ஆளுநர் ரவியின் செயல்பாடுகளுக்கு தமிழ்நாடு அரசு கொடுக்கும் பதிலடியாக இது பார்க்கப்படுகிறது. சரியாக ரஜினியை ஆளுநர் சந்தித்த அதே நாளில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. வேந்தர் என்ற முறையில் இந்த மாநாட்டில் துணை வேந்தர்கள் கலந்து கொள்ள கூடாது என்று ஆளுநர் ரவி உத்தரவிடுவாரா? அல்லது முதல்வரின் செயலில் தலையிடாமல் ஒதுங்கிக்கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications