Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இறையன்பு ஐஏஎஸ் மாநில தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பம்.. புதிய தலைமை செயலாளர் யார்?

தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் விரைவில் ஓய்வு பெற உள்ள நிலையில் மாநில தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பத்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் விரைவில் ஓய்வு பெற உள்ள நிலையில் மாநில தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பத்துள்ளார். இதனிடையே தமிழக முதல்வர் ஸ்டாலினின் பெரும் நம்பிக்கையை பெற்றவராக கருதப்படும் இறையன்பு ஐஏஏஸ்க்கு தலைமை தகவல் ஆணையர் பொறுப்பு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மாநில தலைமை தகவல் ஆணையர் பதவி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவியாகும். தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் துறை வாரியாக என்னென்ன பணிகள் நடந்தன. எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது. எப்படி பணிகள் நிறைவேற்றப்பட்டது. ஒப்பந்ததாரர்கள் யார் யார்? என அரசின் அனைத்து தகவல்களையும் மக்கள் கேட்டு பெற முடியும். அப்படி கேட்கப்படும் விவரங்களை தலைமை தகவல் ஆணையர் தலைமையிலான குழு தான் இறுதி செய்து விவரங்களை தரும்.

எனவே இந்த பதவியில் ஆளும் அரசுக்கு நெருக்கமானவர்களே நியமிக்கப்படுவது வழக்கம் அந்த வகையில் முதல்வர் ஸ்டாலினுக்கு நம்பிக்கையானவராக கருதப்படும் இறையன்பு ஐஏஏஸ்க்கு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

நம்பிக்கை நாயகன்

நம்பிக்கை நாயகன்

தமிழக ஐஏஏஸ் அதிகாரியாக இறையன்பு கடந்த 1988ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். சிறந்த எழுத்தாளரான இவர், பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். மாணவர்கள் பலருக்கும் நம்பிக்கையை விதைக்கும் வகையில் பல நூல்கள் எழுதி உள்ளார். இறையன்பு ஐஏஏஸ் சிறந்த பேச்சாளரும் கூட, மாணவர்களுக்கு உற்சாகம் மற்றும் நம்பிக்கை தரும் வகையில் இவரது பல பேச்சுக்கள் இருந்துள்ளன.

விண்ணப்பம்

விண்ணப்பம்

தமிழ்நாட்டில் ஐஏஏஸ் அதிகாரியாக பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்த இறையன்புக்கு கடந்த 2021ம் ஆணடு மே 7ம் தேதி பதவி ஏற்ற திமுக அரசு தலைமை செயலாளர் பொறுப்பு வழங்கியது. ஜுன் மாதம் 60 வயது நிறைவடையும் இறையன்பு அப்போது ஓய்வு பெறுகிறார். பணி ஓய்வுக்கு ஒரு சில மாதங்களே உள்ள நிலையில, அவர் தமிழ்நாடு மாநில தகவல் தலைமை ஆணையர் பதவிக்காக நீதிபதி அக்பர் அலி தலைமையிலான தேர்வுக்குழுவிடம் விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளார்.

ராஜினாமா செய்வார்

ராஜினாமா செய்வார்

இறையன்பு சமர்ப்பித்துள்ள மாநில தகவல் தலைமை ஆணையர் பதவி உறுதி செய்யப்படும நிலையில் இறையன்பு, இப்போது வகிக்கும் தலைமை செயலாளர் பதவியை ராஜினாமா செய்வார். மாநில தலைமை தகவல் ஆணையர் பொறுப்பு அதன் பிறகு கிடைத்தால் அவர் அந்த பொறுப்பில் 3 ஆண்டுகள் நீடிப்பார்.

யார் யாருக்கு வாய்ப்பு

யார் யாருக்கு வாய்ப்பு

இதனிடையே இறையன்புவிற்கு பிறகு புதிய தலைமை செயலாளராக யார் பதவி ஏற்பார்கள் என்ற பரபரப்பு தலைமை செயலக வட்டாரத்தில் நிலவுகிறது. அதில் மூத்த ஐஏஏஸ் அதிகாரிகள் ஷிவ்தாஸ் மீனா ஹன்ஸ்ராஜ் வர்மா, முருகானந்தம் மற்றும் எஸ்.கே.பிரபாகர் ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன. இதில் யாரை முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்வார் என்பது விரைவில் தெரியவரும்.

விமர்சனம்

விமர்சனம்

இதனிடையே மாநில தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு இறையன்பு ஐஏஏஸ் விண்ணப்பித்திருப்பதை குறிப்பிட்டு பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். தலைமை செயலாளர் பதவியில் இருந்துவிட்டு தலைமை தேர்தல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பிப்பது சரியல்ல என்றும் அவர் காட்டமாக தனது பதிவில் விமர்சித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+