இறையன்பு ஐஏஎஸ் மாநில தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பம்.. புதிய தலைமை செயலாளர் யார்?
தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் விரைவில் ஓய்வு பெற உள்ள நிலையில் மாநில தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பத்துள்ளார்.
சென்னை: தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் விரைவில் ஓய்வு பெற உள்ள நிலையில் மாநில தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பத்துள்ளார். இதனிடையே தமிழக முதல்வர் ஸ்டாலினின் பெரும் நம்பிக்கையை பெற்றவராக கருதப்படும் இறையன்பு ஐஏஏஸ்க்கு தலைமை தகவல் ஆணையர் பொறுப்பு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மாநில தலைமை தகவல் ஆணையர் பதவி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவியாகும். தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் துறை வாரியாக என்னென்ன பணிகள் நடந்தன. எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது. எப்படி பணிகள் நிறைவேற்றப்பட்டது. ஒப்பந்ததாரர்கள் யார் யார்? என அரசின் அனைத்து தகவல்களையும் மக்கள் கேட்டு பெற முடியும். அப்படி கேட்கப்படும் விவரங்களை தலைமை தகவல் ஆணையர் தலைமையிலான குழு தான் இறுதி செய்து விவரங்களை தரும்.
எனவே இந்த பதவியில் ஆளும் அரசுக்கு நெருக்கமானவர்களே நியமிக்கப்படுவது வழக்கம் அந்த வகையில் முதல்வர் ஸ்டாலினுக்கு நம்பிக்கையானவராக கருதப்படும் இறையன்பு ஐஏஏஸ்க்கு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

நம்பிக்கை நாயகன்
தமிழக ஐஏஏஸ் அதிகாரியாக இறையன்பு கடந்த 1988ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். சிறந்த எழுத்தாளரான இவர், பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். மாணவர்கள் பலருக்கும் நம்பிக்கையை விதைக்கும் வகையில் பல நூல்கள் எழுதி உள்ளார். இறையன்பு ஐஏஏஸ் சிறந்த பேச்சாளரும் கூட, மாணவர்களுக்கு உற்சாகம் மற்றும் நம்பிக்கை தரும் வகையில் இவரது பல பேச்சுக்கள் இருந்துள்ளன.

விண்ணப்பம்
தமிழ்நாட்டில் ஐஏஏஸ் அதிகாரியாக பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்த இறையன்புக்கு கடந்த 2021ம் ஆணடு மே 7ம் தேதி பதவி ஏற்ற திமுக அரசு தலைமை செயலாளர் பொறுப்பு வழங்கியது. ஜுன் மாதம் 60 வயது நிறைவடையும் இறையன்பு அப்போது ஓய்வு பெறுகிறார். பணி ஓய்வுக்கு ஒரு சில மாதங்களே உள்ள நிலையில, அவர் தமிழ்நாடு மாநில தகவல் தலைமை ஆணையர் பதவிக்காக நீதிபதி அக்பர் அலி தலைமையிலான தேர்வுக்குழுவிடம் விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளார்.

ராஜினாமா செய்வார்
இறையன்பு சமர்ப்பித்துள்ள மாநில தகவல் தலைமை ஆணையர் பதவி உறுதி செய்யப்படும நிலையில் இறையன்பு, இப்போது வகிக்கும் தலைமை செயலாளர் பதவியை ராஜினாமா செய்வார். மாநில தலைமை தகவல் ஆணையர் பொறுப்பு அதன் பிறகு கிடைத்தால் அவர் அந்த பொறுப்பில் 3 ஆண்டுகள் நீடிப்பார்.

யார் யாருக்கு வாய்ப்பு
இதனிடையே இறையன்புவிற்கு பிறகு புதிய தலைமை செயலாளராக யார் பதவி ஏற்பார்கள் என்ற பரபரப்பு தலைமை செயலக வட்டாரத்தில் நிலவுகிறது. அதில் மூத்த ஐஏஏஸ் அதிகாரிகள் ஷிவ்தாஸ் மீனா ஹன்ஸ்ராஜ் வர்மா, முருகானந்தம் மற்றும் எஸ்.கே.பிரபாகர் ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன. இதில் யாரை முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்வார் என்பது விரைவில் தெரியவரும்.

விமர்சனம்
இதனிடையே மாநில தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு இறையன்பு ஐஏஏஸ் விண்ணப்பித்திருப்பதை குறிப்பிட்டு பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். தலைமை செயலாளர் பதவியில் இருந்துவிட்டு தலைமை தேர்தல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பிப்பது சரியல்ல என்றும் அவர் காட்டமாக தனது பதிவில் விமர்சித்துள்ளார்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications