கண்ணை மறைத்த போதை.. சரக்கு பாட்டில் எங்கே.. சண்டை போட்ட தம்பி.. கத்தி குத்துக்கு பலியான அக்கா
அக்காவை கத்தியால் குத்திய தம்பி கைது செய்யப்பட்டார்
சென்னை: "சரக்கு பாட்டில் எங்கே" என்று கேட்டு சொந்த அக்காவையே கத்தியால் தம்பி குத்தி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர் தாரகேஸ்வரி.. 55 வயதாகிறது.. இவர் இலங்கையை சேர்ந்தவர். இவரது தம்பி குகதாசன்.. 49 வயதாகிறது.

இவர் இலங்கையில்தான் தங்கி உள்ளார்.. சில தினங்களுக்கு முன்பு சமீபத்தில், சபரிமலைக்கு மாலை போட்டிருந்தார்.. கோயிலுக்கும் போய்வந்த குகதாசன், அக்கா வீட்டில் சில நாட்களாக தங்கி இருந்தார்.
மது பழக்கத்துக்கு அடிமையானவர் குகநாதன்.. மாலை போட்டிருந்த நேரத்தில் தண்ணி அடிக்காமல் இருந்தவர், கோயிலுக்கு போய்வந்த பிறகு திரும்பவும் தண்ணி அடிக்க ஆரம்பித்துவிட்டார்.. சம்பவத்தன்று டாஸ்மாக் கடைக்கு போய் 2 குவாட்டர் பாட்டில்களை வாங்கிவந்து, ஒன்றை குடித்துவிட்டு, இன்னொரு பாட்டிலை வீட்டில் மறைத்து வைத்துள்ளார்... முதலில் குடித்த போதை தெளிந்துவிடவும், இன்னொன்றை தேடியுள்ளார்.. ஆனால் அந்த பாட்டில் கிடைக்கவில்லை.
அதனால் சரக்கு பாட்டில் எங்கே, எங்கே ஒளிச்சு வெச்சிருக்கே என்று அக்காவிடம் கேட்டபோது, தனக்கு தெரியாது என்று அவர் சொல்லி உள்ளார்.. இதனால் ஆத்திரமடைந்த குகதாசன், அக்காவிடம் சண்டைக்கு போய்விட்டார்.. அக்கா - தம்பி தகராறு முற்றியது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த குகதாசன், கிச்சனுக்கு போய் கத்தியை எடுத்து வந்து அக்காவை சரமாரி குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து துடிதுடித்து இறந்தார்.. இதை பார்த்து, தாரகேஸ்வரியின் தாயும், மகனும் குகதாசனை தடுக்க வந்தனர்.. ஆனால் அவர்களையும் கத்தியால் குத்தினார்.
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி வளசரவாக்கம் ஸ்டேஷனில் தகவல் அளித்தனர். அதன்பேரில், போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்த பாட்டி - பேரன் இருவரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.. தாரகேஸ்வரியின் சடலத்தையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.. போதை கண்ணை மறைக்க, சொந்த அக்காவை கத்தியால் குத்தி கொன்ற தம்பி குகதாசன் ஜெயிலில் உள்ளார்!
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
காட்டுக்குள் போன மாணவி.. துண்டு துண்டான உடலைப் பார்த்து கதறிய குடும்பம்! துடிதுடித்த தூத்துக்குடி! -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து?












Click it and Unblock the Notifications