தவெகவில் இணைந்தார் யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு! சவுக்கு சங்கர் பேட்டியால் சிறை சென்றாரே அவரேதான்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு இணைந்தார். அவர் பனையூரில் விஜய்யை நேரில் சந்தித்து இணைந்துள்ளார். தற்போது சவுக்கு சங்கர் கைதாகியுள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக கருத்துகளை வெளியிட்டு வருகிறார். மேலும் சவுக்கு மீது புகார் கொடுத்த தயாரிப்பாளரையும் பேட்டி எடுத்திருந்தார்.
தவெகவில் இணைந்தது குறித்து புகைப்படத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ஜெரால்டு, "51 வயது நிரம்பிய நிலையில், நான் கடந்த 12 ஆண்டுகளாக வளர்த்தெடுத்த வணிகப் பொறுப்புகளிலிருந்து விலகி, அடுத்த தலைமுறைக்கான புதிய மாற்றத்தைக் கொண்டு வரும் ஒரு இயக்கத்தில் இணைய முடிவு செய்துள்ளேன்.

தமிழகத்தின் எதிர்காலமாகவும், நம்பிக்கையாகவும் கருதப்படும் எனது முன்னாள் வகுப்புத் தோழரும், சகத் தோழருமான திரு. விஜய்யைச் சந்தித்தது மகிழ்ச்சி. "விஜய், இதை நாம் நிச்சயம் செய்து முடிப்போம்!" என்று பெலிக்ஸ் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு பெண் காவலர்கள் குறித்த அவதூறு செய்தியை ஒளிபரப்பிய புகாரில் சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பு செய்த யூடியூபர் பெலிக்ஸ் ஜெராலட்டை கடந்த ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதி இரவு டெல்லியில் திருச்சி தனிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.
டெல்லியில் கைதான பெலிக்ஸ் தமிழகத்திற்கு அழைத்து வரவில்லை. அவருக்கு உயிருக்கு ஆபத்து என பெலிக்ஸ் மனைவி கண்ணீருடன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். அவர் மேலும் கூறுகையில், "என் கணவருக்கு போன் செய்த போதும் அவர் போனை எடுக்கவில்லை. பின்னர் போலீஸாருக்கு போன் செய்து என் கணவரை எங்கே வைத்திருக்கிறீர்கள் என கேட்டேன். அப்போது திருச்சி என்றார்கள். உடனே ரயில் பிடித்து காலையில் செல்ல டிக்கெட் கிடைக்கவில்லை. அதன் பிறகு நான் பலமுறை என் கணவரின் நம்பருக்கு போன் செய்தும் அவர் எடுக்கவில்லை என கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார். மேலும் தனது வீட்டில் போலீஸார் அத்துமீறி நுழைந்து எதையோ தேடியதாகவும் கூறி அவர்களுடன் வாக்குவாதம் செய்திருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அவர் மீது கோவை போலீஸாரும் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் இவருக்கு கடந்த ஆண்டு மே மாதம் ஜாமீன் வழங்கப்பட்டது. அதே நேரம் கோவை நீதிமன்றத்தில் இவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு பெலிக்ஸ் விண்ணப்பித்திருந்த நிலையில் அவரது மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் , கோவை டவுன்ஹால் காவல் நிலையத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெலிக்ஸ் ஜாமீனில் விடுதலைச் செய்யப்பட்டார். அவரது யூடியூப் சேனலில் தொடர்ந்து பல்வேறு பேட்டிகளை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் ஜெரால்டு தற்போது தவெகவில் இணைந்துள்ளார்.
-
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
தவெக மாய உலகத்தில் இருக்கிறது.. கிராமப்புறங்களில் காத்து வாங்கும் கட்சி! ஷாக் ரிப்போர்ட் -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
என்னது நாங்க தவெகவை கூட்டணிக்கு அழைத்தோமா.. கடுகடுத்த செல்லூர் ராஜூ -
புஸ்சி ஆனந்த் ஒழிக.. கோஷமிட்ட தவெக நிர்வாகிகள்.. புதுவையில் போட்டியிட சீட் வழங்காததால் ஆதங்கம் -
காத்திருந்து காத்திருந்து! புதுவையில் தவெகவுடன் இணைந்த கூட்டணி! அப்போ அந்த 2 வேட்பாளர்கள் நிலை? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
2026 தேர்தலில் புதிய சக்திகள்! 5 முனை போட்டிக்கு வழிவகுத்த ஜூனியர்ஸ்! யாருக்கு சாதகம்? பாதகம்? -
தவெகவில் இணைந்த அன்றே சீட் கொடுத்த விஜய்.. பாஜகவில் இருந்து தாவி உடனே வேட்பாளர் ஆன சாய் சரவணன்! -
சொதப்பும் ஸ்டாலின்.. திமுகவுக்கு எதிராக திரும்பும் வன்னியர் வாக்கு! தலித் வாக்குகளை பிரிக்கும் விஜய்












Click it and Unblock the Notifications