ஃபேஸ்புக்கில் போட்டோ போட்ட மாணவி.. துடிதுடிக்க கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞர்
கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஒருதலைபட்சமாக மாணவி ஒருவரை காதலித்து வந்த இளைஞர், மாணவி ஃபேஸ்புக்கில் போட்டோ பதிவிட்டதால் ஆத்திரமடைந்து அவரது வீடு புகுந்து கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த அந்த இளைஞர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி, வடுகபாளையத்தில் உள்ள பொன்மலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் அஸ்விதா கோவை தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியில் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் பிரவீன் என்ற இளைஞரும் தனது குடும்பத்துடன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு குடியிருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு பிரவீன் குடும்பத்தார் பொள்ளாச்சி - உடுமலை சாலை அருகே குடிபெயர்ந்துள்ளனர். பிரவீன் கல்லூரி மாணவி அஸ்விதாவை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். அஸ்விதா மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், மாணவி தனது முகநூலில் தனது நண்பர்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பிரவீன் கல்லூரி மாணவியிடம் சண்டை போட்டுள்ளார். ஒருகட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பிரவீன் மாணவியின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று அவரை கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த மாணவி அங்கேயே மயக்கமடைந்துள்ளார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் மாணவியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மாணவியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மாணவியின் உடல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த கொலை குறித்து ஏஎஸ்பி சிருஷ்டி சிங் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நிதி நிறுவன ஊழியரான பிரவீன் மேற்கு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். கல்லூரி மாணவி சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications