சென்னை மெரினா புரட்சியை நினைவுப்படுத்திய இஸ்லாமியர்கள் போராட்டம்.. கோவையில் நடந்தது என்ன?
Recommended Video
சென்னை மெரினா புரட்சியை நினைப்படுத்திய இஸ்லாமியர்கள் போராட்டம்.. கோவையில் நடந்தது என்ன?
கோவை: சென்னை மெரினா புரட்சியை நினைவுப்படுத்தும் வகையில் கோவையில் இஸ்லாமியர்கள் செல்போன் டார்ச்லைட்டுளை காட்டினர்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் நேற்று மாலை போராட்டம் நடத்தினர்.

மண்டை உடைந்து காயம்
அப்போது அவர்களை கலைந்து செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்தினர். அதற்கு மறுப்பு தெரிவித்ததால் இரு தரப்பினருக்குமிடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீஸார் முஸ்லீம் அமைப்பினர் மீது தடியடி நடத்தினர். இதில் ஏராளமானோருக்கு மண்டை உடைந்து காயம் ஏற்பட்டது.

ஜல்லிக்கட்டு
போலீஸார் தாக்குதலை கண்டித்து சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முஸ்லீம் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கோவையில் நேற்று இரவு நடந்த முஸ்லீம்கள் போராட்டத்தில் மக்கள் செல்போன் டார்ச் லைட்களை எரிய வைத்து போராட்டம் நடத்தினர். இது ஜல்லிக்கட்டு சம்பவத்தை நினைவுப்படுத்தியது.

தடை
கடந்த 2017-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதை கண்டித்து சென்னை மெரினாவில் ஏராளமான இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது இந்த போராட்டத்தை விட்டு விட்டு கலைந்து செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்தினர். இதற்கு போராட்டக்காரர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

டார்ச்லைட்
இதையடுத்து போராட்டத்தை ஒடுக்க அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உடனே இளைஞர்கள் தங்களிடம் இருந்த செல்போன்களின் டார்ச்லைட்டுகளை காட்டி போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர். இது பெரிதாக பேசப்பட்டது. விளக்குகளை நிறுத்திவிட்டால் மாணவர்கள் கலைந்து சென்று விடுவர் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் டார்ச் லைட்டை வைத்து உத்வேகத்தை அளித்தனர்.
-
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா?












Click it and Unblock the Notifications