கோவையில் விரைவில் திறக்கப்படும் செம்மொழி பூங்கா.. இறுதிக்கட்டப் பணிகள் தீவிரம்
கோவை: கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும், காந்திபுரத்தில் 45 ஏக்கரில் அமைக்கப்பட்டு வரும் செம்மொழி பூங்கா அமைக்கும் பணி விரைவில் நிறைவடையவுள்ளது. பூங்கா பணிகள் அனைத்தும் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடிாக கோவை மாவட்டம் பெரிய மாவட்டமாகும். இங்கு கல்வி, மருத்துவம், தொழில், வேலைவாய்ப்பு, ஐடி துறை, தொழில் துறை என வளர்ச்சி பெற்ற மாவட்டமாகும். பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து பல்வேறு தேவைகளுக்காக இங்கு வந்து தங்கி வசித்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப பொழுதுபோக்கு இடங்கள் பெரிய அளவில் இல்லை. இந்த குறையைப் போக்கும் வகையில் செம்மொழிப் பூங்கா அமைக்கும் பணி விரைவில் நிறைவடையவுள்ளது.

காந்திபுரத்தில் மத்திய சிறைச் சாலை இருந்த பகுதியில் இந்தப் பூங்கா கட்டப்பட்டு வருகிறது. 45 ஏக்கர் பரப்பளவில் இந்தப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் இந்தப் பூங்காவை அரசு திறக்க திட்டமிட்டது. ஆனால், சில சாகச அம்சங்களை சேர்க்க வேண்டும் என்பதால் வடிவமைப்பில் மாற்றம் செய்ததால் திறக்கும் பணி தாமதமானது.
இந்தப் பூங்காவில் நுழைவாயிலில் மிகப்பெரிய மலைமுகப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த மலைக் குன்றுகளுக்கு இடையே மரங்கள் வைக்கப்பட்டுள்ளன. விலங்கினங்களும் செதுக்கப்பட்டுள்ளன. நீர்வீழ்ச்சி அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் அருகில் கடையேழு வள்ளல்களின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பூந்தோட்டகளும் அமைக்கப்பட்டுள்ளன.
மூன்று வரிசைகள் ஏற்படுத்தப்பட்டு நூறு வகையான ரோஜா செடிகள் வைக்கப்படுள்ளன. இந்தப் பூங்காவின் மற்றொரு பகுதியில் திறந்தவெளி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. நீருற்றுகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. குழந்தைகள் விளையாடுவதற்கான இடம், புல்தரை, போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
செம்மொழிப் பூங்காவை நவம்பர் மாத இறுதியில் திறக்க ஆலோசிக்கப்பட்டு வந்தது. உயரதிகாரிகள் பூங்கா வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பூங்காவில் அனைத்துப் பணிகளும் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன. இன்னும் சில பணிகள் முடிக்க வேண்டியுள்ளதால் டிசம்பர் மாதத்துக்குள் பணிகள் அனைத்தையும் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
கோவை வந்த மோடியை வரவேற்க அண்ணாமலை வராதது ஏன்? புது காரணம் சொன்ன நயினார் நாகேந்திரன் -
கோவையில் தொடங்கிய திமுக ஆட்டம்.. ஃபயர் மோடில் செந்தில் பாலாஜி.. பரபரக்கும் களம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா?












Click it and Unblock the Notifications