பதைபதைக்கும் கோவை.. கலெக்டர் ஆபீஸுக்கு 9வது முறையாக மீண்டும் வந்த வெடிகுண்டு மிரட்டல்
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட வருகிறது. இந்நிலையில், 9 ஆவது முறையாக இன்று மீண்டும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து , வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனையிட்டனர். இதனால், ஆட்சியர் அலுவலகத்தில் கடும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையின் இதயப் பகுதியில் அமைந்துள்ளது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம். இங்கு தினந்தோறும் உதவித் தொகை உள்ளிட்ட நலத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க, குறைகேட்பு முகாமில் பங்கேற்க, மனு அளிக்க என ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வது வழக்கம். கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பழையது, புதியது என்று 2 கட்டடங்கள் உள்ளன.

ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள புதிய கட்டடத்தில் மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா் ஆகியோரின் அறைகளும், குடிமைப் பொருள் வழங்கல் துறை, கனிம வளத் துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்கள் உள்ளன. பழைய கட்டடத்தில் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம், சமூக நலத் துறை, நிலவரித் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்கள் உள்ளன.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோவையில் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் பள்ளிகள், தனியார் அலுவலகம் என இந்த ஆண்டு மட்டும் 30க்கும் மேற்பட்ட இமெயில் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
ஆனால், இந்த மிரட்டல் தொடர்பாக இதுவரை எந்தவொரு நபரும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் கடந்த 4 மாதங்களில் 9 ஆவது முறையாக மீண்டும் ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு விரட்டல் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மோப்ப நாயுடன் வந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து பகுதிகளிலும் சோதனையில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications