மேலும் எத்தனை மாணவிகள்? மொத்தம் 12 மணி நேரம் விசாரணை! கோவை சின்மயா பள்ளி முதல்வர் சொன்னது என்ன?
கோவை பள்ளி முதல்வரிடம் விசாரணை நடந்து முடிந்துள்ளது
கோவை: கோவை மாணவி தற்கொலை வழக்கு விவகாரத்தில், கைதான பள்ளி முதல்வரிடம் விசாரணை நடந்துள்ளது.. கிட்டத்தட்ட 12 மணி நேரம், பல்வேறு பதில்களை வாக்குமூலமாக போலீசாரிடம் மீரா தந்துள்ளதாக கூறப்படுகிறது.
கோவை மாணவி தற்கொலை விவகாரம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.. ஒட்டுமொத்த தமிழ்நாடே ஆவேசத்தில் உள்ளது.
3 நாட்களாக பரபரப்பின் பிடியில் கோவை சிக்கி தவித்து வருகிறது.. ஆர்எஸ்புரம் சின்மயா பள்ளியில் 17 வயது மாணவியின் தற்கொலைக்கு காரணம், இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி தந்த பாலியல் தொல்லைதான் என்பது வெட்ட வெளிச்சமாகி வருகிறது..

கைது
6 மாதமாக மனஉளைச்சலில் மாணவி தவித்து வந்ததாக சக மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.. ஆசிரியரின் பெயரையும், வேறு சிலருடைய பெயர்களையும் குறிப்பிட்டு அவர்களை எல்லாம் சும்மா விடாதீர்கள் என்று எழுதப்பட்ட மாணவியின் கடைசி கடிதமும், அதில் உள்ள பெயர்களும் வலுவான சாட்சியாக அமைந்துவிட்டது.. மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணை
பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டில் வைத்து அதிரடியாக கைது செய்தனர்.. பிறகு அவரை கோவை ஆர்எஸ்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்... அங்கு துணை கமிஷனர்கள் ஜெயச்சந்திரன், உமா ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பள்ளி முதல்வரிடம் போலீசார் பல கேள்விகளை எழுப்பியதாக தெரிகிறது.

நடவடிக்கை
குறிப்பாக, ஆசிரியரின் பாலியல் தொல்லை குறித்து மாணவி தெரிவித்தும், ஏன் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை? பாலியல் தொல்லை தெரிந்தும், போலீசாருக்கும், மாவட்ட குழந்தைகள் மையத்திற்கும் தகவல் தெரிவிக்காது ஏன்? அதற்கு என்ன காரணம்? யாராவது நடவடிக்கை எடுக்க வேண்டாம், வெளியில் சொல்ல வேண்டாம் என்று அழுத்தம் தந்தார்களா? மிதுன் சக்ரவர்த்தி இந்த மாணவியை போன்று வேறு மாணவிகள் யாருக்கேனும் பாலியல் தொல்லை தந்திருக்கிறாரா? அது பற்றி புகார் ஏதாவது வந்ததா? என்றெல்லாம் கேள்வி எழுப்பி உள்ளதாக தெரிகிறது.

வாக்குமூலம்
இதற்கெல்லாம் மீரா ஜாக்சன் பதில் அளிக்கவும், அவைகளை போலீசார் வீடியோ பதிவுடன் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.. தொடர்ந்து 12 மணி நேரமாக வாக்குமூலம் தந்துள்ளார் மீரா ஜாக்சன்.. வருகிற 26-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் அவரை வைக்க உத்தரவிடப்பட்டிருந்தாலும், விசாரணை தொடர்ந்து நடக்க உள்ளதாக தெரிகிறது.

விசாரணை
இதுபற்றி காவல்துறை தரப்பில் சொல்லும்போது, இந்த மரணம் தொடர்பாக விசாரணை நடக்கிறது.. தற்கொலைக்கு முன்பு எழுதியதாக சொல்லப்பட்ட கடிதம், லீக் ஆன வாட்ஸ்- அப் மெசேஜ்கள், ஆசிரியர் - மாணவியின் ஆடியோ உரையாடல்கள் போன்றவைகளை வைத்து விசாரணையை துவக்கி உள்ளதாகவும், அந்த கடிதத்தில் உள்ள பெயர்கள், விவரங்கள் குறித்தும் விசாரணை நடப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications