கே.டி.ராகவன் வீடியோ விவகாரம்.. மதன் ரவிச்சந்திரன், திமுக மீது குற்றம்சாட்டும் வேலூர் இப்ராஹிம்
கோவை: மதன் ரவிச்சந்திரனை முன்னிறுத்தி கே.டி.ராகவனை வைத்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட திமுக முயற்சித்துள்ளது என்று பா.ஜ.க தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலூர் இப்ராஹிம் குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video
பாஜக தமிழக பொதுச் செயலாளராக இருந்த கே.டி.ராகவன் வீடியோ காலில் செக்ஸ் சாட் செய்வது போன்ற வீடியோவை மதன் ரவிச்சந்திரன் என்பவர் சமீபத்தில் யூடியூப்பில் வெளியிட்டார். இதையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார் கே.டி.ராகவன்.
உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீடியோ சித்தரிக்கப்பட்டுள்ளதாக ராகவன் கூறியதோடு, சட்டப்படி இந்த பிரச்சினையை சந்திப்பதாக கூறியிருந்தார்.

இஸ்லாமியர்கள் இணைகிறார்கள்
இந்த நிலையில், பா.ஜ.க தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலூர் இப்ராஹிம், கோவை வி.கே.கே மேனன் சாலையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், இன்று, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது: கணிசமான இஸ்லாமியர்கள் பாஜகவில் தொடர்ந்து இணைந்து கொண்டிருக்கிறார்கள். கோவை மாநகர் மாவட்டம் சார்பாக பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக் கொள்வதற்காக நம்ம ஆட்டோ நிறுவனர் ஷாஜகான் வரும் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி ஆயிரம் இஸ்லாமியர்களோடு பாஜகவில் இணைத்துக் கொள்ள இருக்கிறார்.

மத நம்பிக்கைகள்
இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே வேறுபாட்டை ஏற்படுத்தக்கூடிய திமுகவின் கபட நாடகம் செல்லுபடியாகாது. இந்து சமய நம்பிக்கைகளின் மீது திமுக அரசாங்கம் தொடர்ந்து கேலி செய்து வருகிறது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் கோவில் வழிபாட்டுக்கு அனுமதி இல்லை என்று கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாது. பயபக்தியோடு ஆலயங்களுக்கு செல்ல கூடியவர்களை தடுக்கும் வேலையை திமுக அரசாங்கம் செய்து வருகிறது.

விநாயகர் சதுர்த்தி விழா
விநாயகர் சதுர்த்தி விழாவை திமுக அரசாங்கம் தடுப்பது, வன்மையான கண்டனத்துக்குரியது. இந்து மக்களின் நலன்களைக் காப்பதற்காக திமுக அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும். தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத அரசாக திமுக அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.

திமுக மீது குற்றச்சாட்டு
திமுகவின் தூண்டுதலின் பேரில்தான் மதன் ரவிச்சந்திரனை முன்னிறுத்தி பாஜகவில் சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கே.டி ராகவனை வைத்து அரசியல் செய்யப்பட்டிருப்பதாக கூறிய வேலூர் இப்ராஹிம், கே.டி. ராகவன் விவகாரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை தெளிவாக நடவடிக்கையை கையாண்டிருக்கிறார் என்றும் கூறினார். ஒரு பெண்ணை வைத்து ஒரு ஆணின் தனிப்பட்ட ஆசையைத் தூண்டி அதில் அரசியல் ஆதாயம் தேடும் அரசியல் நாகரீகமற்ற வேலையை திமுக செய்திருப்பதாகவும், பாஜகவில் பெண்கள் அதிகமாக இணைந்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications