காதுக்கு வர செய்தியை அப்படியே பேசாதீங்க.. சீமானுக்கு மனோ தங்கராஜ் அட்வைஸ்
கோவை: பாலில் ரசாயன பொருட்களைக் கலந்தோம் என்று குற்றம் சாட்டியவர்கள் எல்லாம் இன்று வாயடைத்துப் போயுள்ளனர். அவர்களிடம் அதனை நிரூபிக்க ஆதாரங்களே இல்லை. லட்சக்கணக்கான விவசாயிகள் நம்பி இருக்கும் தொழில்கள் குறித்து அரசியல்வாதிகள் காது வழி செய்திகளை வைத்து விமர்சிக்க கூடாது என்று கோவையில் பால் வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் "மிஷன் ஒயிட் வேவ்" என்ற பயிற்சி பட்டறை திட்டத்தை பால் வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் உள்ள கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் செயல் திட்டத்தை மேம்படுத்தி உள்ளோம்.

அனைத்து சங்கங்களையும் லாபத்தில் இயங்கும் சங்கமாக மாற்ற செயல்திட்டம் வைத்துள்ளோம். 483 செயல் இழந்த சங்கங்களையும் செயல்பட வைத்து உள்ளோம். 2,484 சங்கங்கள் புதிதாக செயல்பாட்டுக்கு வந்துள்ளன. 1,325 சங்கங்கள் இன்னும் செயல்படாத சங்கங்களாக லாபம் ஈட்ட முடியாமல் உள்ளனர். இதனை மாற்றும் வகையில் தனியார் கல்லூரிகளையுடன் இணைந்து எம்பிஏ மாணவர்களை கொலாப்ரேஷன் செய்து சில மாணவர்களை தேர்வு செய்து பிசினஸ் மேப் உருவாக்கி சங்கங்களை லாபமாக கட்டமைக்க இந்த திட்டத்தை தொடங்க உள்ளோம்.
ஆவின் பொருள்களின் விற்பனையை கிராமப் பகுதிகளில் அதிகரிக்க 3 மாதங்களில் நடவடிக்கை இருக்கும். மிஷன் ஒயிட் வேவ் மாடலில் கிடைக்கும் படிப்பினைகள் மூலம் இதனை விரிவுபடுத்தும் திட்டமும் உள்ளன. AI எதிர் பாராத வளர்ச்சியடைந்துள்ளது. அது இரு முனை கத்தி போல அதில் அதிக நல்லதும் உள்ளது கெட்டவையும் உள்ளன. AI ஒரு புதிய இணைய தளத்தையே உருவாக்கும் அளவிற்கும் வளர்ந்துள்ளது. AI is the product of human brain என்றார்.
தமிழ்நாட்டில் பாலின் தரம் எந்த அளவிற்கு தற்போது உள்ளது என்ற கேள்விக்கு, தமிழ்நாடு அளவில் பாலின் தர அளவு நன்கு உயர்ந்துள்ளது. ஆடு மாடுகளுக்காக சீமான் நடத்தும் மாநாடு தொடர்பாக கேள்வி எழுப்பிய போது , நகர மயமாதலை எதிர் பார்க்கிறோம். அப்போது மேய்ச்சல் நிலங்கள் குறையும் என்பது நிச்சயம் இருக்கும். அதற்கான தீர்வுகளையும் காண்போம் என பதிலளித்தார்.
மேலும், விமர்சனம் செய்பவர்கள் முன்னேற்றங்களைப் பற்றியும் பேச வேண்டும். பாலில் கொழுப்பை சேர்த்தோம், டிடெர்ஜென்ட் சேர்த்தோம் என்று எல்லாம் விமர்சனம் செய்தார்கள். இப்போது வாய் அடைத்து போய் உள்ளார்கள். வளர்ச்சிக்கான சிறப்பான திட்டங்கள் இருந்தால் கூறுங்கள். நிச்சயம் ஏற்கிறோம். அரசியல் தலைவர்கள் காது வழி செய்திகளை வைத்து பேசக் கூடாது. விவசாயிகள் நம்பி இருக்கும் துறை குறித்து எல்லாம் பேசும் போது நன்கு ஆராய்ந்து பேச வேண்டும் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications