ஏன் வாந்தி எடுக்கிறே.. மாசமா இருக்கியா... தாறுமாறாக பேசிய தலைமை ஆசிரியை.. கொந்தளித்த மக்கள்
சாதி பெயரை சொல்லி மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியை திட்டி உள்ளார்
Recommended Video

கோவை: "சனியனே.. மூதேவி.. எங்காவது போய் தொலையேன்.." என்று பள்ளி மாணவ-மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியை சகட்டுமேனிக்கு திட்டி உள்ளார். அப்போது சாதி பெயரையும் குறிப்பிட்டு திட்டியதால், பெற்றோர்கள் திரண்டு வந்து பள்ளியை முற்றுகையிட்டு விட்டனர்!
கோவை சரவணம்பட்டி அடுத்த கரட்டுமேடு பகுதியில் மாநகராட்சி ஆரம்பபள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் லட்சுமணன் என்பவரின் 11 வயது மகள் 4-ம் வகுப்பும், 9 வயது மகன் 3-ம் வகுப்பும் , அம்ஸ் கண்ணன் என்பவரின் 10 வயது மகள் 4-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

ஜெயந்தி
இந்நிலையில் பள்ளியின் தலைமையாசிரியை ஜெயந்தி பேபி என்பவரது 11 வயது மகளை பிரம்பால் அடித்துள்ளார். இதில், சிறுமிக்கு கை, தொடைகளில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அதே மாணவியை சாதி பெயரை சொல்லியும் திட்டியதாக தெரிகிறது.

முழக்கம்
இதனால் கொதிப்படைந்த பெற்றோர்கள், பள்ளியை முற்றுகையிட்டு, தலைமையாசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கமிட்டனர். இது பற்றி கூறிய பெற்றோர், "இப்படியா குழந்தைகளை அடிக்கிறது? படிக்க வர்ற இடத்துல எதுக்கு சாதி, மதத்தை பத்தி பேசணும்? என் பொண்ணு இங்கதான் படிக்குதுங்க. சனியன், மூதேவின்னு திட்டி இருக்காங்க.

பயம் இல்லை
ஏற்கனவே இந்த தலைமையாசிரியை 2 முறை இப்படிதான் நடந்துக்கிட்டாங்க. இதுக்கு மேல எப்படி பொறுமையா இருக்கிறது? இதனாலதான் எத்தனையோர் தங்கள் பிள்ளைகளை இந்தப் பள்ளியில் சேர்க்காமல் சரவணம்பட்டியில் கொண்டு போய் சேர்க்கிறார்கள். இதை பத்தியெல்லாம் கேட்டதுக்கு, நீ எங்க வேணாலும் போய் சொல்லிக்க.. எனக்கு பயம் இல்லைன்னு சொல்றாங்க.

முற்றுகை
என் பொண்ணுக்கு 10 வயசு.. சாப்பிட்டது சேராமல் வாந்தி எடுத்து இருக்கிறாள். இதை பார்த்துட்டு, "என்ன மாசமா இருக்கியா"ன்னு அவங்க கேட்டிருக்காங்க. ஒரு குழந்தைகிட்ட இப்படியா பேசறது?" என்று கொதித்து போய் கேட்டார். இதனிடையே தலைமை ஆசிரியை மாணவிகளிடம் தரக்குறைவான வார்த்தைகளால் பேசும் ஆடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications