பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய யாரையும் தப்ப விட்டு விடக்கூடாது - ஈஸ்வரன்
பொள்ளாச்சி பாலியல் குற்றச்செயலில் சம்பந்தப்பட்டவர்கள் யாரையும் சிபிஜ அதிகாரிகள் தப்பிக்க விட்டுவிடக்கூடாது என்றுகொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
கோவை : பொள்ளாச்சி பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளுக்கும் வெகு சீக்கிரமாக தண்டனை பெற்றுத்தர சிபிஐ உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இந்த பாலியல் குற்றச்செயலில் சம்பந்தப்பட்டவர்கள் யாரையும் சிபிஐ அதிகாரிகள் தப்பிக்க விட்டுவிடக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Recommended Video

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் வெளியே தெரிந்த போதே இதன் பின்னணியில் அதிமுக நிர்வாகிகள் இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு பலராலும் முன் வைக்கப்பட்டது. ஆனால் அதிமுகவும், தமிழக அரசும் உண்மையை வெளியுலகுக்கு தெரியாமல் மூடி மறைக்கவே முயற்சித்தது. அதிமுகவினர் யாரும் இந்த பாலியல் வழக்கில் சம்பந்தப்படவில்லை என்றும் மறுத்தார்கள். ஆனால் தற்போது சிபிஐ இவ்வழக்கில் தொடர்புடைய அதிமுக நிர்வாகிகள் அருளானந்தம், ஹெரோன் பால் மற்றும் பாபு ஆகிய 3 பேரை கைது செய்திருக்கிறார்கள்.

இந்த பாலியல் கொடூர சம்பவத்தில் ஆளுங்கட்சியை சேர்ந்த பலருக்கு தொடர்பு இருப்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. தமிழக அரசின் அதிகார மையத்தில் இருப்பவர்களுக்கும், அதிமுகவில் உயர்மட்ட பொறுப்பில் இருப்பவர்களுக்கும் இதில் தொடர்பு இருப்பதால்தான் சிபிஜ விசாரணைக்கு தமிழக அரசு சரியான ஒத்துழைப்பு கொடுக்காமல் வழக்கை தாமதப்படுத்தி இருக்கிறது. அதிகார அத்துமீறல்களை பெண்களுக்கு எதிரான கொடூர குற்றச்செயலுக்கு அதிமுக நிர்வாகிகள் பயன்படுத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் வர இருப்பதால் இந்த வழக்கை நீர்த்துப்போக செய்யவே ஆளுங்கட்சியான அதிமுக முயற்சிக்கும். இந்த பாலியல் குற்றச்செயலில் சம்பந்தப்பட்டவர்கள் யாரையும் சிபிஜ அதிகாரிகள் தப்பிக்க விட்டுவிடக்கூடாது. இவ்வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள குற்றவாளிகளுக்கும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள அதிமுக நிர்வாகிகள் 3 பேருக்கும் காவல்துறை தகுந்த பாதுகாப்பை வழங்கிட வேண்டும்.
இவ்வழக்கில் இருந்து அதிகாரத்தில் உள்ளவர்களை தப்பிக்க வைப்பதற்காக கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பொள்ளாச்சி பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளுக்கும் வெகு சீக்கிரமாக தண்டனை பெற்றுத்தர சிபிஐ உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
-
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி! -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
வேலுமணி அணி வைத்த டிமாண்ட்.. எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார்? அதிமுகவுக்கு குட் நியூஸ்! -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
அதிமுக எம்எல்ஏக்கள் தவெக இணைவது நாகரிகம் அற்றது.. அமைச்சர் வன்னியரசு பேட்டி












Click it and Unblock the Notifications