கோவையில் நரபலியா?.. இருகூர் தண்டவாளத்தில் 1 1/2 வயது குழந்தையின் சடலம்.. போலீஸ் விசாரணை
சென்னை: கோவை மாவட்டம், இருகூர் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ஒன்றரை வயது குழந்தையின் சடலம் கிடந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் குழந்தையின் உடலைக் கைபற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தண்டவாளத்தில் குழந்தை சடலம்
கோவை மாவட்டம், இருகூர், ராவுத்தூர் தரைப்பாலம் அருகே தண்டவாளம் ஒன்று உள்ளது. இந்த தண்டவாளத்தில் ஆண் குழந்தையின் சடலம் ஒன்று கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த போத்தனூர் ரயில்வே காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு தண்டவாளத்தில் ஒன்றரை வயதான ஆண் குழந்தை சடலமாகக் கிடந்துள்ளது தெரியவந்துள்ளது.

நரபலியா?...
காவல் துறையினர் உடனடியாக அந்தக் குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது குழந்தையின் உடலின் அருகே மஞ்சள், குங்குமம், ரத்தம், வெட்டப்பட்ட கோழியின் உடல் ஆகியவை கிடந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதாக அப்பகுதி முழுவதும் தகவல் பரவியுள்ளது.
மோப்பநாய்
ஒன்றரை வயது குழந்தையை குழந்தை நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து போத்தனூர் ரயில்வே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
ரயிலில் இருந்து தவறிய குழந்தை?
சோதனை மேற்கொண்ட மோப்ப நாய் குழந்தையின் உடல் கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிய பின்னர் நின்றுவிட்டது. யாரையும் பிடிக்கவில்லை. இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், ஒன்றரை வயது குழந்தை தண்டவாளத்தில் உயிரிழந்தது கிடப்பது எப்படி என்பது தெரியவில்லை. ரயிலில் சென்றபோது குழந்தை தவறி கீழே விழுந்து உயிரிழந்ததா, அல்லது வேறு ஏதேனும் காரணமா, என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்பகுதியில், நரபலி கொடுக்கப்பட்டதாக தகவல் பரவி வருகிறது. நரபலி கொடுக்கப்பட்டதற்கான அடையாளங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. அப்படி கொடுப்பதற்கான வாய்ப்பும் இந்தப் பகுதியில் இல்லை. குழந்தை உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
-
கோவையின் இதயப் பகுதியில் ஏற்பட போகும் மாற்றம்.. செந்தில் பாலாஜி ஷார்ப் திட்டம் -
கோவையில் கேபிள் டிவியில் ஓடிய விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம்.. உரிமையாளரை கைது செய்த போலீஸ் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம்












Click it and Unblock the Notifications