தமிழகத்தில் இன்று முதல் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சொட்டு மருந்து திரவம் வழங்க ஏற்பாடு
கோவை: கோவை மாவட்டத்தில் 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை வழங்கப்படவுள்ளது.
கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- வைட்டமின் 'ஏ' ஆரோக்கியமான கண்பார்வைக்கு முக்கிய பங்களிக்கிறது. இது மட்டும் அல்லாமல் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திக்கும், தோல், திசு மற்றும் எலும்பு வளர்ச்சிக்கும் முக்கியமானதாகும்.

இந்த சத்து குறைபாட்டினால் வறண்ட விழித்திரை, விழிவெண் திரையில் முக்கோண வடிவத்தில் வெண்ணிறமாக தடித்தல் மற்றும் மாலைக்கண் நோய் போன்றவை ஏற்படும். இவற்றுக்கு தக்க சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் பார்வை இழக்க நேரிடும். இதனை கருத்தில் கொண்டு தேசிய அளவில் ஆண்டுக்கு இருமுறை வைட்டமின் ஏ திரவம் நாடு முழுவதும் 6 மாதம் முதல் 5 வரை உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் இந்த முகாமானது வருகிற இன்று முதல் 25-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வழங்கப்பட உள்ளது.
இந்த முகாம்களில் பொது சுகாதாரத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட துறைகளை சார்ந்த கணப்பணியளாளர்கள் இணைந்து பணியாற்ற உள்ளனர். இந்த முகாமின் மூலம் கோவை மாவட்டத்தில் உள்ள 2 லட்சத்து 68 ஆயிரத்து 740 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
எனவே பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவத்தை அளித்து கண் பார்வை குறைபாடில்லாத இளைய சமுதா யத்தினரை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications