கோவையில் பூச்சி இருப்பதாக சண்டை.. பதிலுக்கு 10 பிரியாணி வாங்கிய ஐடி ஊழியர்கள்.. கடைசியில் ட்விஸ்ட்
கோவை: சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் கோவை சரவணம்பட்டி-துடியலூர் சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். சம்பவம் நடந்த அன்று கடைக்கு வந்த இரண்டு இளைஞர்கள் பிரியாணி பார்சல் வாங்கிச் சென்றனர். பின்னர் கடைக்கு தேடி வந்த அவர்கள், பிரியாணியில் பூச்சி இருந்ததாக கூறி தகராறில் ஈடுபட்டார்களாம். அத்துடன் அந்த பிரியாணிக்கு பதிலாக 10 பிரியாணி பார்சல் வேண்டும் என்று கேட்டு வாங்கினாராம். அதன் பின்னர் ஆம்லேட்டுக்காக தகராறு செய்து ஓட்டல் உரிமையாளரை தாக்கினார்களாம். அவர்கள் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாநகரை பொறுத்தவரை ஓட்டல்கள் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் மிக மிக அதிக அளவில் உயர்ந்துவிட்டது. கோவையில் எங்கு திரும்பினாலும், ஒவ்வொரு கார்னர் பகுதியிலும் ஓட்டல்கள் அதிகமாக இருக்கின்றன. தென் மாவட்டங்களை சேர்ந்த பலர் கோவையில் ஹோட்டல் வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். சிலர் ஓட்டல்களில் வேண்டுமென்றே பொய்யான தகவல்களை கூறி பணம் பறிக்கும் சம்பவங்கள் நடக்கிறது.

அதே போல் ஓட்டல்களில் சிலர் சால்னா கூடுதலாக வாங்கவும், ஓசியில் பிரியாணி வாங்கவும் தவறான தகவல்களை பரப்புகிறார்கள். இந்த விவகாரத்தில் பலர் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. அதேநேரம் ஓட்டல்களில் சில நேரம் பிரியாணியில் பூச்சி இருப்பதாகவும், புழு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அப்படி ஒரு சம்பவத்தில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதாகும் ராமச்சந்திரன் என்பவர் கோவை கணபதியில் தங்கி இருந்து சரவணம்பட்டி-துடியலூர் சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். சம்பவம் நடந்த அன்று கடைக்கு வந்த இரண்டு இளைஞர்கள் பிரியாணி பார்சல் வாங்கிச் சென்றனர். சிறிது நேரம் கழித்து மீண்டும் நண்பர்களுடன் வந்த அந்த இளைஞர்கள் பிரியாணியில் பூச்சி இருந்ததாக கூறி தகராறில் ஈடுபட்டார்களாம். அப்போது அந்த பிரியாணிக்கு பதிலாக 10 பிரியாணி பார்சல் வேண்டும் என்று கேட்டு வாங்கியிருக்கிறார்கள்.
ஆனாலும் அவர்கள் அங்கிருந்து செல்லாமல் சிக்கன், ஆம்லெட் உள்ளிட்டவைகளை தரும்படி கேட்டு மீண்டும் தகராறில் ஈடுபட்டு இருக்கிறார்கள். ஆனால் ராமச்சந்திரன் தர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ராமச்சந்திரனையும், அவரது சகோதரரையும் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்களாம்.
இந்த சம்பவம் குறித்து ராமச்சந்திரன் கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் ஓட்டல் உரிமையாளரை தாக்கியது ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த சக்திவேல் (23), கேரள மாநிலம் குருவாயூரை சேர்ந்த பஹீம் அகமத் (24) ஆகியோர் என்பதும், அவர்கள் துடியலூர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்து ஐ.டி.நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தார்கள்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications