குழந்தை கழுத்தில் காலை வைத்து மிதித்து.. தூக்கில் தொங்கிய வேதவள்ளி.. நடு ராத்திரியில் கொடுமை!
கோவையில் இளம்தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
Recommended Video
கோவை: குழந்தையின் கழுத்தில் காலை வைத்து மிதித்தார் தாய் வேதவள்ளி.. இதில் குழந்தையும் இறந்துவிட்டது.. தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை ஒண்டிப்புதூர் ஸ்ரீ காமாட்சி நகரை சேர்ந்தவர் வேதவள்ளி. 41 வயதாகிறது. கணவர் அமெரிக்காவில் வேலை பார்த்த போது இறந்து விட்டார். இதனால், தன்னுடைய 5 வயது மகள் கார்குழலியுடன் தனது பெற்றோர் மற்றும் தம்பியுடன் அவர் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நடுராத்திரி 2 மணிக்கு வீட்டில் சண்டை நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கொஞ்ச நேரத்தில், கார்குழலிக்கு உடம்பு சரியில்லாமல் போனதால், வேதவள்ளி தவிர, எல்லாரும் கால் டாக்ஸியில் ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர்.

ரத்தக் கறைகள்
அப்போது வீட்டில் ஆங்காங்கே ரத்தக் கறைகள் தெரிந்திருக்கின்றன.. டிவி உள்ளிட்டவை உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதைதவிர, குழந்தையை தூக்கி சென்ற வேதவள்ளியின் தம்பி மாதவனுக்கு தலையில் ரத்தக் காயங்கள் இருந்ததாக அக்கம்பக்கத்தினர் சொன்னார்கள். அதனால் இது சம்பந்தமாக போலீசார் வேதவள்ளியின் தம்பி, அவரது அப்பாவை அழைத்து நடுராத்திரி என்னதான் நடந்தது என்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் சொன்னதாவது:

ரத்தக் கறைகள்
அப்போது வீட்டில் ஆங்காங்கே ரத்தக் கறைகள் தெரிந்திருக்கின்றன.. டிவி உள்ளிட்டவை உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதைதவிர, குழந்தையை தூக்கி சென்ற வேதவள்ளியின் தம்பி மாதவனுக்கு தலையில் ரத்தக் காயங்கள் இருந்ததாக அக்கம்பக்கத்தினர் சொன்னார்கள். அதனால் இது சம்பந்தமாக போலீசார் வேதவள்ளியின் தம்பி, அவரது அப்பாவை அழைத்து நடுராத்திரி என்னதான் நடந்தது என்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் சொன்னதாவது:

மனவேதனை
"வேதவள்ளியின் கணவன் அமெரிக்காவிலேயே இறந்துவிட்டார். அவர் திடீரென இறந்துவிடவும், மனவேதனையுடன் குழந்தையை தூக்கி கொண்டு எங்க வீட்டுக்கு வந்தார் வேதவள்ளி. ஊர் திரும்பிய உடனேயே அவருக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டது. அதனால் பெங்களூரு போய், அங்கேயே தங்கி இதற்கு சிகிச்சையும் எடுத்து கொண்டோம். இந்த ஊருக்கு வந்து 6 மாசம்தான் ஆகுது.

நொறுக்கிடுவார்
ஆனால், வேதவள்ளிக்கு திடீர் திடீர்னு ஆவேசம் வந்துடும்.. மூர்க்கத்தனமான நடந்துப்பார்.. பக்கத்துல யார் இருந்தாலும் போட்டு அடிச்சிடுவார்.. கையில் கிடைத்த பொருளையும் தூக்கி போட்டு நொறுக்கிடுவார். இப்படி எப்பவாவதுதான் நடக்கும். ஆனா, அந்த சமயத்துல வேதவள்ளியை நாங்க எல்லாரும் ஒன்னு சேர்ந்து கயிறு எடுத்து கட்டிப்போடுவோம். அப்பறம் கொஞ்ச நேரத்தில சரியாயிடுவார்.

குழந்தை
நேத்து ராத்திரியும் அப்படித்தான் ஆயிடுச்சு.. நல்லாதான் தூங்கிட்டு இருந்தாங்க.. திடீரென நடுராத்திரி மூர்க்கம் ஆயிட்டாங்க. டிவியை அடிச்சு நொறுக்கிட்டாங்க. வழக்கம்போல, அவங்களை எல்லாரும் சேர்ந்து தடுக்க போனோம். அப்போ என் மேல டூவீலருக்கு காற்றடிக்கும் பம்ப்பை எடுத்து கொண்டு வந்து என் தலையிலேயே அடிச்சிட்டாங்க. ரத்தம் கொட்ட ஆரம்பிச்சிடுச்சு. இதுக்கு நடுவுல, குழந்தையின் கழுத்தில் காலைவெச்சு மிதித்துட்டார். அப்பவே குழந்தை மயங்கிடுச்சு.. அதனாலதான ஆஸ்பத்திரிக்கு ஓடினோம்.. ஆனா வழியிலேயே இறந்துபோச்சு.." என்றனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications