Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக மீனவர்கள் 13 பேர் கைது.. பிப்.10 வரை நீதிமன்றக் காவல்.. இலங்கை நீதிமன்றம் போட்ட உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 13 மீனவர்களையும், பிப்.10ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்கதையாக நடந்து வருகிறது. இதனால் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரகம் மீனவர்கள் கைது செய்யப்படாமல் தடுக்க, நிரந்தர தீர்வை காண வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தன்று கூட 34 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

Srilankan Court has ordered to remand 13 Tamil Nadu fishermen arrested until february 10th

தற்போது அடுத்த 2 நாட்களில் மீண்டும் 13 மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. காரைக்காலில் இருந்து 2 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றனர். அதில் நெருந்தீவு அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 13 மீனவர்களையும் கைது செய்தனர். அதுமட்டுமல்லாமல் ஒரு விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதும் தெரிய வந்தது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 மீனவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் சம்பவம் கடந்த சில ஆண்டுகளாக இல்லாமல் இருந்தது.

திடீரென மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருப்பதற்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் கண்டனங்களை எழுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கான இலங்கை தூதரை நேரில் அழைத்து மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. அதேபோல் இலங்கைக்கான இந்திய தூதரையும் மீனவர்களை சந்தித்து சம்பவம் குறித்தும் கேட்டறிந்துள்ளனர்.

தற்போது கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறை கடற்கரை முகாமிற்கு அழைத்து சென்று, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்திய மீனவர்கள் 13 பேரையும் பிப்.10ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+