கடலூரில் "அந்தரத்தில்" தொங்குச்சாமே.. மிட்நைட்டில் ஊசலாடிய 40 உயிர்கள்.. கண்விழித்து பார்த்தால்???
கடலூர்: அரசு பஸ் ஒன்று அந்தரத்தில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்து, கடலூரே அதிர்ந்து போய்விட்டது.. என்ன நடந்தது நள்ளிரவில்?
சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு விரைவு பஸ் ஒன்று கிளம்பி சென்றது.. கிட்டத்தட்ட 40 பேர் அதில் பயணம் செய்தனர். வீரமணி என்பவர் இந்த பஸ்ஸை ஓட்டினார். இவருக்கு 45 வயதாகிறது.

இந்த பஸ் நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு, கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சென்னிநத்தம் குறுக்கு சாலை வெள்ளாற்று மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது..
நள்ளிரவு என்பதால், பயணிகள் எல்லாருமே தூங்கி கொண்டிருந்தனர். அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ், அந்த பாலத்தின் தடுப்பு சுவர் மீது பலமாக பஸ் மோதியது... சிறிது தூரத்துக்கு தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு சென்று, பஸ்சின் முன்பகுதி மட்டும் பாலத்தில் அந்தரத்தில் தொங்கியப்படி நின்றுவிட்டது.
அந்தரத்தில் பஸ்: பாலத்தில் பஸ் இடித்துவிட்டதை அறிந்து, தூங்கி கொண்டிருந்த பயணிகள் எல்லாம் அலறி கூச்சல் போட்டார்கள்.. இதனால், பஸ்ஸை விட்டு வெளியே வர முயன்றார்கள்.. அந்த பாலத்திலேயே அந்தரத்தில் பஸ் தொங்கிக்கொண்டிருப்பதை அப்போதுதான் பார்த்தார்கள்.. இதனால் மேலும் பயத்தில் கூச்சல் போட்டார்கள்.. முன்பக்க படிக்கட்டு பாலத்தில் அந்தரத்தில் தொங்கியபடியே இருந்ததால், அவர்களால் உடனடியாக கீழே இறங்கி வரவும் முடியவில்லை.
பதற்றத்தில் கூச்சலிட்டபடியே இருந்தனர்.. இந்த அலறல் சத்தத்தை கேட்டு, பாலத்தின் கீழ் பகுதியில் வசிக்கும் மக்கள், பதறியடித்து கொண்டு வந்தார்கள்.. பஸ் பாலத்தில் தொங்கியதால், அவர்களால் உடனடியாக பஸ்ஸில் ஏறி செல்ல முடியவில்லை. எனினும், பஸ்சின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு, பயணிகளை வெளியே மீட்டனர்.
பரபரப்பு: அதற்குள் தகவலறிந்த சேத்தியாத்தோப்பு போலீஸ் விரைந்து வந்து, பயணிகைளை பத்திரமாக மீட்டனர். பஸ் கீழே விழுந்திருந்தால், மிகப்பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும். ஆனால், அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு, மாற்று பஸ் மூலம் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
மீட்பு வாகனத்தை கொண்டு வந்து, அந்தரத்தில் தொங்கியபடி நின்ற பஸ்சையும் போலீசார் மீட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு
கின்றனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications