கடலூரில் கொத்தனாருடன் மலர்ந்த காதல்.. தலையில் இடி இறக்கிய மனைவி.. கடைசியில் நடந்த கிரேட் ட்விஸ்ட்
2 நாட்களுக்கு முன்பு, கர்நாடக மாநிலத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது.. தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உள்ள கங்கனாடி டவுன் பகுதியில் வசித்து வரும் பெண்ணுக்கு 35 வயதாகிறது... இவரது கணவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார்.

கொத்தனார் கணவர் கொடுமை
உடனே அந்த போலீஸ்காரர், கொத்தனார் கணவரிடன் செல்போனை பிடுங்கி, அதில் பதிவாகியிருந்த ஆபாச வீடியோவை அழித்தார். ஆனால் சந்திரநாயக், அந்த பெண்ணின் கணவரின் அனுமதியுடனே, பாதிக்கப்பட்ட பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். மேலும், தனக்கு தெரிந்த நண்பர்கள் சிலருடனும் உடலுறவில் இருக்க சொல்லி பெண்ணை கட்டாயப்படுத்தியிருக்கிறார். இறுதியில் இதன்மூலம் லட்சக்கணக்கில் சந்திரநாயக் சம்பாதித்தும் உள்ளார்..
ஒருகட்டத்தில் உடல் மற்றும் மனரீதியான பாதிப்புக்குள்ளான அப்பெண், இதுகுறித்து கங்கனாடி போலீசில் புகார் அளித்தார்.. இதற்கு பிறகுதான், சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் கர்நாடகாவில் நிலவி கொண்டிருக்கிறது.
காட்டுமன்னார்கோவில் தம்பதி
இப்படிப்பட்ட சூழலில், நம்முடைய கடலூர் மாவட்டத்தில், இதற்கு நேர்மாறான சம்பவம் ஒன்று தற்போது நடந்துள்ளது.. காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது பழஞ்சநல்லூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வரும் தம்பதி ஜெகத்குரு - வனிதா.. இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்களாகின்றன.வனிதாவுக்கு இப்போது 29 வயதாகிறது.. செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை சேர்ந்தவ ஜெகத்குரு, ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் வனிதா, தன்னுடைய கணவரை விட்டு பிரிந்து, 2 மகன்களையும் அழைத்துக் கொண்டு, பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார். அப்போது, வனிதாவிற்கும், பிரபாகரன் என்ற கொத்தனாருக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக கனிந்தது. பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிய கணவர்
இதற்கு நடுவில் கோபித்துக்கொண்டு போன மனைவியை சமாதானம் செய்து அழைத்து வரலாம எனறு ஜெகத்குரு, மாமியார் வீட்டுக்கு சென்றார்.. ஆனால், அங்கு வனிதாவை காணவில்லை.. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெகத்குரு, பல இடங்களில் மனைவியை தேடினார்..எங்கேயும் மனைவி கிடைக்காத நிலையில், காட்டுமன்னார்கோவில் போலீஸ் ஸ்டேஷனுக்கு பதறிக்கொண்டே ஓடினார்..
தன்னுடைய மனைவியை எப்படியாவது கண்டுபிடித்து தருமாறு புகார் தந்தார்.. போலீசாரும் அந்த புகாரின் பேரில் விசாரணையை நடத்தினார்கள்.. அப்போதுதான், வனிதா, கொத்தனார் பிரபாகரனுடன் வசித்து வருவது தெரியவந்தது.
நிலைகுலைந்த கணவர்
இதுகுறித்து போலீசார் வனிதாவிடம் பேசியதற்கு, காதலன் பிரபாகரனுடன்தான் வாழ்வேன் என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார்.. இதைக்கேட்டு நிலைகுலைந்து போனார் ஜெகத்குரு.. மனைவியை சமாதானம் செய்து அழைத்து செல்லலாம் என்று வந்தவர், அடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்தார்..
பிறகு போலீசாரிடம், மனைவிக்கு யாருடன் வாழ பிடிக்கிறதோ அவருடனே மகிழ்ச்சியாக வாழட்டும் என்று சொல்லிவிட்டார்.. அத்துடன், மனைவியை வாழ்த்தி விட்டு, கொத்தனார் பிரபாகரனுடன் அனுப்பி வைத்தார்... பிறகு தன்னுடைய 2 மகன்களை அழைத்துக்கொண்டு ஜெகத்குரு கண்ணீர் மல்க சொந்த ஊருக்கு புறப்பட்டார்....!
-
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications