கடுமையான இதய நோயால் போராடும் தந்தையை இழந்த 11 வயது சிறுவனுக்கு உதவுங்கள்!
கடலூர்: சிறு வயதில், தந்தையை இழந்து தவித்து வரும் 11 வயது சிறுவன் கபிலன் தற்போது கடுமையான இதய நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவரது தாய், மனநல பாதிப்பால் தவித்து வருவதால், உயிரை காப்பாற்றிக்கொள்ள வேறு வழியின்றி உங்களை அணுகியுள்ளார்.
கபிலன், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுவன். கலெக்டராக ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் கபிலனின் வாழ்க்கையில் ஏராளமான பிரச்னைகள். அவனது தந்தை சிறுநீரக பாதிப்பால் சில ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டார். குடும்பத்தை ஒற்றை ஆளாய் இருந்து காப்பாற்றியது அவர்தான். ஆனாலும், அவரது உயிரை அவராலேயே காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. தாய் மனநலம் பாதிக்கப்பட்டவர். இன்றைய சூழலில், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சரி செய்யும் அளவுக்கு சாமானிய மக்களிடம் பொருளாதார வசதிகள் கிடையாது.

அந்த வகையில், தனது தாயை கவனித்துக்கொள்ள கபிலன் தன்னால் முடிந்ததை செய்து வருகிறான். ஆனால், இப்போது அவனது உயிரையே காப்பாற்றிக் கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது. 11 வயதில் இருக்கும் சிறுவர்கள் எந்த அளவுக்கு ஆக்டிவாக இருப்பார்களோ, அந்த அளவுக்கு கபிலனால் இருக்க முடியவில்லை. அடிக்கடி உடல் நலப் பிரச்சனை, சுவாச கோளாறு, நெஞ்சு வலி போன்றவற்றால் கபிலன் கடந்த சில நாட்களாக துடித்து வந்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் மருத்துவமனையில் சென்று பரிசோதித்தபோது, கபிலனுக்கு இதய நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மருத்துவர்கள் இதனை ருமாட்டிக் இதய நோய் என்று குறிப்பிடுகிறார்கள். இதற்காக உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். ஆனால், இப்போது குடும்பத்திற்காக கபிலனின் பாட்டிதான் வீட்டு வேலைகளை செய்து வருகிறார். இதில் வரும் சொற்ப வருமானத்தை கொண்டு இதய நோயை சரி செய்துவிட முடியாது.
அறுவை சிகிச்சை, மருந்து மாத்திரைகள் என ரூ.3.25 லட்சம் செலவாகும். இவ்வளவு பெரிய தொகையை மாத ஊதியம் வாங்குபவர்களால் கூட உடனடியாக ஏற்பாடு செய்துவிட முடியாது. ஆனால் நீங்கள் நினைத்தால் கபிலனின் உயிரை காப்பாற்ற முடியும்.
எல்லா நல்ல செயல்களுக்கும் ஒரு தொடக்கம் தேவைப்படுகிறது. மற்றவர்கள் கொடுக்கும் வரை காத்திருக்காமல் உடனே, முடிந்த உதவியை செய்யுங்கள். சிறு தொகையும், பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications