1984 சீக்கிய கலவரம்.. 186 வழக்குகளை மீண்டும் விசாரிக்க முடிவு.. உச்சநீதிமன்றம் அதிரடி

1984ம் ஆண்டு ஏற்பட்ட சீக்கிய கலவரம் தொடர்பான 186 வழக்குகளை மீண்டும் விசாரிக்க, இரண்டு நபர்கள் கொண்ட குழுவிற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி : 1984ம் ஆண்டு ஏற்பட்ட சீக்கிய கலவரம் தொடர்பான 186 வழக்குகளை மீண்டும் விசாரிக்க, இரண்டு நபர்கள் கொண்ட குழுவிற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

முன்னாள் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.என் டிங்ரா தலைமையிலான சிறப்பு விசாரணை குழுவின் (எஸ்.ஐ.டி.) கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது.

1984 riots: SC accepts two-member SIT to probe 186 cases

டெல்லியில் கடந்த 1984ம் ஆண்டு அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தியை அவரது சீக்கிய மெய் காப்பாளர்கள் சுட்டு கொலை செய்தனர். இதனால் டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. இதில் சுமார் 2,800 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

இதுதொடர்பான 241 வழக்குகளை விசாரிக்க, நீதிபதி டிங்கரா மற்றும் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. இதில், போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி, 55 வழக்குகளை தவிர, 186 வழக்குகளை விசாரணை நடத்தாமல் முடித்து வைக்கப்பட்டது.

பின்னர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா (ஓய்வு பெற்றதில் இருந்து), நீதிபதி ஏ.எம். கான்வில்கர் மற்றும் நீதிபதி சந்திரச்சாத் ஆகியோர் சிறப்பு விசாரணை குழுவின் மூன்று உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், விசாரணை நடத்தப்படாமல் முடித்து வைக்கப்பட்ட 186 வழக்குகளை மீண்டும் விசாரிக்க இரண்டு நபர்கள் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, விரைவில் விசாரணை தொடங்கும் என கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+