Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாக்குப்பதிவு விவரங்களில் குளறுபடி.. 48 மணி நேரத்தில் வெளியிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து 48 மணிநேரத்திற்குள் சரியான வாக்குப்பதிவு விவரங்களை வெளியிட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது ஏடிஆர் எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவும், கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு கடந்த 7ஆம் தேதி 94 தொகுதிகளுக்கும் நடைபெற்று முடிந்துள்ளது.

ADR moves Supreme Court for accurate publication of voter turnout data

வரும் மே 13ஆம் தேதி நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கிடையே, தேர்தல் ஆணையம் அளித்த வாக்குப்பதிவு புள்ளி விவரங்களில் முரண்கள் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவுக்கான இறுதி வாக்குபதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் தாமதமாக வெளியிட்டது.

முதற்கட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை 11 நாட்கள் கழித்தும், இரண்டாம் கட்ட தேர்தலில் பதிவான இறுதி வாக்குப்பதிவு சதவீதத்தை 4 நாட்கள் கழித்தும் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. ஆனால், தேர்தல் நடந்து முடிந்த அன்று வெளியான சதவீதத்துக்கும், நீண்ட தாமதத்துக்கு பிறகு வெளியான வாக்குப்பதிவு சதவீதத்திற்கும் இடையே முரண்பாடுகள் இருந்தன.

ஏப்ரல் 19ஆம் தேதியன்று மாலை 7 மணி நிலவரப்படி முதற்கட்ட வாக்குப் பதிவில் பதிவான வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 60 சதவீதம் என்று தேர்தல் ஆணையம் கூறியது. அதேபோல், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் மதிப்பிடப்பட்ட வாக்குப்பதிவு சுமார் 60.96 சதவீதமாக இருந்தது.

ஆனால், இந்த வாக்குப்பதிவு நாட்களுக்கு மறுநாளான, ஏப்ரல் 20 அன்று தேர்தல் ஆணையத்தால் கணிக்கப்பட்ட முதல் கட்ட வாக்குப்பதிவு 65.5% ஆகவும், ஏப்ரல் 27 அன்று கணிக்கப்பட்ட இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான சதவிகிதம் 66.7 சதவீதமாகவும் இல்லை. இறுதியாக, ஏப்ரல் 30ஆம் தேதி அன்று, தேர்தல் ஆணையம் அளித்த புள்ளிவிவரங்களின்படி, முதல் கட்டத்தில் 66.14 சதவீதமும், இரண்டாம் கட்டத்தில் 66.71 சதவீதமும் வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது.

வழக்கமாக, வாக்குப்பதிவு முடிந்த 24 மணி நேரத்திற்குள் வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிடும். பெரும்பாலும் அதில் மாற்றம் இருக்காது. இந்நிலையில், திடீரென ஏற்பட்டுள்ள இந்த தாமதமும், முரண்பாடுகளும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.

இந்த நிலையில், வாக்குப்பதிவு முடிந்து 48 மணி நேரத்திற்குள் பதிவான வாக்கு விகிதங்களை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், முதற்கட்டத் தேர்தல் தொடங்கி அதிக தாமதத்துடனும் வழக்கத்திற்கு மாறான பல்வேறு திருத்தங்களுடன் வாக்குப்பதிவுத் தரவுகள் வெளியிடப்படுவது அச்சத்தை எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்ற அச்சங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை, வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற, வாக்குப்பதிவு தரவுகளை வெளியிடுவதில் தேர்தல் ஆணையம் உரிய நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும், வாக்குச்சாவடி வாரியாகவும் தொகுதிகள் வாரியாகவும் வாக்குப்பதிவு தரவுகளை வாக்குப்பதிவு நிறைவடைந்த 48 மணி நேரத்திற்குள் வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என தமது மனுவில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+