டெல்லியில் இன்று காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அமித் ஷா அழைப்பு
டெல்லி: டெல்லியில் இன்று(திங்கள்கிழமை) காலை 11 மணிக்கு கொரோனா பாதிப்பு குறித்து அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார்.
டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 2,224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 41,182 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் ஒரு நாளில் மட்டும் 56 பேர் உயரிழந்துள்ளனர், இதனால் டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1327 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டின் தலைநகரான டெல்லி உள்பட பல்வேறு நகரங்களில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருவது குறித்து மத்திய அரசு கவலை அடைந்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டு செல்வதால் நோயாளிகளிக்கு சிகிச்சை அளிக்க பெட் வசதி அளிக்க முடியாத நிலை இருக்கிறது. இதனை எதிர்கொள்ள மத்திய அரசின் உதவியை நாடியுள்ளது டெல்லி அரசு.
இந்நிலையில் நாளை காலை 11 மணிக்கு டெல்லி கொரோனா பாதிப்பு குறித்து அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி துணை நிலை ஆளுநர், பாஜக நிர்வாகிகள், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸ் வர்தன் மற்றும் உயர் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்கள். உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications