நான் பார்த்தவரை பிரதமர் மோடிக்கு இருக்கும் செல்வாக்கு எந்த பிரதமருக்கும் இருந்ததில்லை.. அமித்ஷா
டெல்லி: 5 மாநில சட்டசபைத் தேர்தல்களில் பாஜக பெருவாரியான வெற்றி கிடைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
Recommended Video
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. உத்தரப்பிரதேசத்திற்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் இறுதி கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது.
வரும் 10 ஆம் தேதி 5 மாநில தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த நிலையில் நேற்று டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டாவும் அமைச்சர் அமித்ஷாவும் கலந்து கொண்டனர்.

பாஜக தோற்காது
அப்போது அவர்கள் கூறுகையில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக தோல்வியுறும் என நம்பிக்கையை வைத்திருந்தவர்கள் நிச்சயம் வேதனைக்குள்ளாவர். ஏற்கெனவே 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி உள்ள நிலையில் அங்கு பெருவாரியான வாக்குகளுடன் பாஜக ஆட்சியை தக்க வைத்து கொள்ளும்.

பிரதமருக்கு இருக்கும் செல்வாக்கு
அறிவியல் பூர்வமாக நன்றாக ஒருங்கிணைக்கப்பட்டது பாஜகவின் தேர்தல் பிரச்சாரங்கள். அந்த தேர்தல் பிரச்சாரங்களில் நான் பார்த்த வரை, பிரதமர் நரேந்திர மோடிக்கு 5 மாநிலங்களிலும் இருக்கும் செல்வாக்கு இதுவரை எந்த ஒரு பிரதமருக்கும் இருந்ததில்லை. உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு முன்பு வரை கொள்கைகள், தேர்தல் வாக்குறுதிகள் பேப்பருடன் சரி.

தேர்தல் வாக்குறுதிகள்
ஆனால் பாஜக ஆட்சியில் 92.6 சதவீத தேர்தல் அறிக்கைகளை நிறைவேற்றிவிட்டோம். பிரதமர் மோடியை வாரணாசி மக்கள் வரவேற்ற விதத்தை பாரக்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. தேர்தலுக்கு முன்பு என்பிபி, நாகா மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளோம். இருப்பினும் கூட்டணி கட்சிகளின் ஆதரவில்லாமல் தனிபெரும்பான்மை பெற்று ஆட்சியை உருவாக்கும் மற்றொரு மாநிலமாக மணிப்பூர் விளங்கும்.

பாஜகவுக்கு நம்பிக்கை
வாரிசு அரசியலை காட்டிலும் செயல்பாட்டு அரசியலில் பாஜகவுக்கு நம்பிக்கை இருக்கிறது. கொரோனா விதிகளை பின்பற்றி வாக்களிக்க வந்த 5 மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர். இரு மாதங்களாக 690 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் உ.பி (403 தொகுதிகள்), பஞ்சாப் (117), உத்தரகாண்ட் (70), மணிப்பூர் (60), கோவா (40) ஆகியவை ஆகும்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications