''அவை மரபுகளை மீறி விட்டார்''... மக்களவையில் ராகுல் காந்திக்கு எதிராக பாஜக எம்.பி.க்கள் நோட்டடீஸ்!
டெல்லி: விவசாய போராட்டங்களில் இறந்தவர்களுக்காக மக்களவையில் ராகுல் காந்தி 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார். திரிணாமுல் காங்கிரஸ், திமுக உறுப்பினர்களும் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். இதன் மூலம் ராகுல் காந்தி சபை மரபை மீறி விட்டார் என்று தற்போது புகார் கூறப்பட்டுள்ளது.
பாஜக எம்.பி.க்கள் சஞ்சய் ஜெய்ஸ்வால், நிஷிகாந்த் துபே, பிபி சவுத்ரி மற்றும் மீனாட்சி லேகி ஆகியோர் சபாநாயகரிடம் ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் கொண்டு வந்தனர்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நேற்று மக்களவையில் வேளாண் சட்டங்கள் குறித்து பேசினார். அப்போது அவர் , 'வேளாண் சட்டங்களால் எந்த நிலையிலும் விவசாயிகளுக்கு ஆபத்துதான் உள்ளது. இந்தியாவை சேர்ந்த ஒரு நான்கு பேர் ஆதாயம் பெறத்தான் வேளாண் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த 4 பேர்தான் இந்தியாவை வழிநடத்துகின்றனர். அவர்கள் யார் என்று மக்களுக்கு நன்கு தெரியும். இந்த சட்டங்கள் மூலம் விவசாயிகள் பலரை அரசு பலி கொடுத்து விட்டது' என்று பேசினார்.
மேலும் விவசாய போராட்டங்களில் இதுவரை 200 பேர் இறந்து விட்டதாக கூறிய ராகுல் காந்தி, அவர்களுக்காக 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துவதாக கூறினார். அவருடன் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உறுப்பினர்களும் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். இதன் மூலம் ராகுல் காந்தி சபை மரபை மீறி விட்டார் என்று தற்போது புகார் கூறப்பட்டுள்ளது.
பாஜக எம்.பி.க்கள் சஞ்சய் ஜெய்ஸ்வால், நிஷிகாந்த் துபே, பிபி சவுத்ரி மற்றும் மீனாட்சி லேகி ஆகியோர் சபாநாயகரிடம் ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் கொண்டு வந்தனர். இது தொடர்பாக பாஜக எம்.பி. சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறுகையில், மக்களவையில் முதன் முறையாக, ஒரு எம்.பி. அனைவருக்கும் எழுந்து மவுன அஞ்சலி செலுத்த உத்தரவு பிறப்பிப்பதைக் கண்டோம். சில எம்.பி.க்கள் அதைச் செய்தார்கள். என்வே உத்தரவு பிறப்பித்த ராகுல் காந்தி மற்றும் எழுந்த அனைத்து எம்.பி.க்களுக்கும் எதிராக மக்களவை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
பாஜக தலைமை கொறடா ராகேஷ் சிங் கூறுகையில், ராகுல் காந்தியின் செயல் அதிர்ச்சியூட்டுகிறது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாது. இது அவை என்னும் கோவிலை களங்கப்படுத்தும் செயல். மவுன அஞ்சலி செலுத்துவது தொடர்பாக ராகுல் காந்தி முன்னரே அனுமதி பெற்றிருக்க வேண்டும். இது தொடர்பாக அவர் ஒரு கோரிக்கையை வைத்திருக்க வேண்டும் என்று கூறினார்.
-
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications