“மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்குவதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க முடியாது” - உச்சநீதிமன்றம்
டெல்லி: சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர், குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க கால தாமதம் ஏற்படுகிறது என்று தொடுக்கப்பட்ட வழக்கில், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க உச்சநீதிமன்றம் காலக்கெடுவை விதித்து உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பியிருந்தார். இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான வழக்கை, உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இந்நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

அரசியல் சாசன அமர்வுக்கு தலைமை வகிக்கும், தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயின் பதவிக்காலம் நவ.23ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆனால் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், நவ.21ம் தேதி அவரது கடைசி பணி நாளாகும். இப்படி இருக்கையில், ஓய்வு பெறுவதற்கு ஓரு நாள் முன்னர் இந்த தீர்ப்பு வந்திருக்கிறது.
தீர்ப்பில், "மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்குவதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க முடியாது. பொதுவாக அமைச்சரவையின் ஆலோசனையின்படிதான் ஆளுநர் செயல்பட வேண்டும். மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை எனில், மசோதாவை சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பிவிட வேண்டும். ஆளுநருக்கு உள்ள தனிப்பட்ட அதிகாரம் என்பது, மசோதாவை ஆய்வு செய்ய நிறுத்தி வைப்பது அல்லது சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்புவதுதான். ஆளுநர் காரணம் ஏதும் கூறாமல் நீண்ட காலமாக மசோதாவை நிறுத்தி வைப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.
மசோதா ஆளுநருக்கு அனுப்பப்படும்பட்சத்தில் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். அல்லது ஜனாதிபதிக்கு அனுப்பலாம். அல்லது திருப்பி அனுப்பலாம். இந்த மூன்று வாய்ப்புகள்தான் ஆளுநருக்கு இருக்கிறது. இந்த 3ல் ஒன்றை தேர்ந்தெடுப்பதுதான் ஆளுநருக்கான தனிப்பட்ட அதிகாரம். மத்திய அரசு கூறுவதை போல, மசோதாக்களை நிறுத்தி வைக்கும் வாய்ப்பு ஆளுநருக்கு கிடையாது. ஒரு மாநிலத்தில் இரண்டு நிர்வாக அதிகார மையம் இருக்க கூடாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், அமைச்சரவையும்தான் முடிவெடுக்கும் இடத்தில் இருக்கும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே அதிகாரம் இருக்கிறது. ஆளுநர் செயல்படாமல் இருந்தால், அரசியலமைப்பும், நீதிமன்றங்களும் அதை ஆய்வு செய்யும்" என்று நீதிபதிகள் கூறியிருக்கின்றனர்.
-
"பொது சிவில் சட்டம் தான் ஒரே தீர்வு.." முஸ்லீம் பெண்கள் பிரச்சனை.. அழுத்தமாக சொன்ன உச்ச நீதிமன்றம் -
ஓபிசி கிரீமிலேயர்.. பெற்றோரின் சம்பளத்தை வைத்து மட்டுமே தீர்மானிக்க கூடாது.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
தமிழ்நாடு புதிய டிஜிபி நியமனம் எப்போது? மார்ச் 20-ல் யுபிஎஸ்சி கூட்டம் - உச்ச நீதிமன்றத்தில் தகவல்! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட்












Click it and Unblock the Notifications