அமமுகவிற்கு குக்கரை ஒதுக்க முடியாது.. 300 பக்கத்திற்கு பிரமாண பத்திரம்.. தேர்தல் ஆணையம் அதிரடி
அமமுகவிற்கு குக்கர் சின்னம் ஒதுக்கவே முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
டெல்லி: அமமுகவிற்கு குக்கர் சின்னம் ஒதுக்கவே முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் டெல்லி ஹைகோர்ட்டில் தெரிவித்து இருந்தது. இது டிடிவி தினகரனுக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. இதனால் டிடிவி தினகரன் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட இருக்கிறது. நாளை அவசர வழக்காக விசாரிக்கப்படும்.

நாளை வேட்புமனு
அதே சமயம் நாளைத்தான் வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது. குக்கர் சின்னம் கிடைக்காததால் இதுவரை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தின் கருத்தை உச்ச நீதிமன்றம் கேட்டு இருந்தது.

பதில்
இதையடுத்து காலையில் எழுத்து பூர்வமாக கருத்தும் எதுவும் தெரிவிக்காத தேர்தல் ஆணையம் தற்போது இந்த வழக்கில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதன்படி அமமுகவிற்கு குக்கர் சின்னம் ஒதுக்கவே முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இது தினகரன் தரப்பிற்கு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது.

என்ன பிரமாண பத்திரம்
மொத்தம் அந்த பிரமாண பத்திரத்தில் 300 பக்கங்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது, இந்த 300 பக்கங்கள் முழுக்க அமமுகவிற்கு ஏன் சின்னம் கொடுக்க கூடாது என்று தேர்தல் ஆணையம் விளக்கி இருக்கிறது. அதில் குக்கர் சின்னம் என்பது பொதுவானது, அதை டிடிவி தினகரனுக்கு நிரந்தரமாக ஒதுக்க முடியாது. அமமுக பதிவு செய்யப்பட கட்சி கிடையாது. அதனால் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

சின்னம் என்ன
மேலும் அமமுகவிற்கு வேறு சின்னம் வேண்டுமானால் ஒதுக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதனால் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் புதிய சின்னத்தில் தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. இருந்த போதிலும் இந்த வழக்கில் நாளை நடக்கும் விசாரணையில் முக்கிய உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வாய்ப்பு இருக்கிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications