5 மாத குழந்தையை காக்க ரூ. 6 கோடி ஜிஎஸ்டி வரி தள்ளுபடி.. மத்திய அரசுக்கு குவியும் பாராட்டுகள்
டெல்லி: 5 மாத பச்சிளம் குழந்தையின் உயிரை காப்பாற்றுவதற்காக மருந்தின் மீதான ஜிஎஸ்டி வரி ரூ 6 கோடியை மத்திய அரசு தள்ளுபடி செய்தது.
Recommended Video

மும்பையைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 5 மாத குழந்தை டீரா காமத். இவருக்கு அரிய வகை மரபியல் நோய் பாதிப்பு இருந்தது. இதற்கு மரபணு மாற்ற அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம் என மருத்துவர்கள் கூறியிருந்தனர்.
ஆனால் இதற்காக ஜோல்கென்ஸ்மா என்ற மருந்து அவசியம் தேவைப்படுகிறது. இது அமெரிக்காவில் கிடைக்கும். இதன் விலை ரூ 16 கோடியாகும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நடுத்தர குடும்பம்
நடுத்தர குடும்பத்தினர் என்பதால் இந்த விலையை கேட்டவுடன் சற்று அதிர்ந்த அந்த பெற்றோருக்கு ஒரே லட்சியம் குழந்தையை எப்படியாவது காப்பாற்றுவதுதான். இதனால் நிச்சயம் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என யாரிடமும் உதவி கேட்டாவது அந்த பணத்தை திரட்டிவிடலாம் என எண்ணினர்.

சமூகவலைதளங்கள்
அதன்படி பெற்றோர் சமூகவலைதளங்கள் மூலம் மருந்திற்கான பணத்தை திரட்டினர். ஆனால் அந்த மருந்திற்கு ரூ 6 கோடி ஜிஎஸ்டி வரி கட்ட வேண்டியிருந்தது. இதனால் பணத்துக்கு என்ன செய்வது என தெரியாமல் அந்த பெற்றோர் மனம் கலங்கினர்.

வரி தள்ளுபடி
இந்த மருந்திற்கு வரித் தள்ளுபடி கொடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் மகாராஷ்டிரா மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர ஃபட்னவீஸுக்கும் அந்த பெற்றோர் கடிதம் எழுதியிருந்தனர்.

ரூ 6 கோடி தள்ளுபடி
இதையடுத்து அந்த மருந்திற்கான ரூ 6 கோடி ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகளை மத்திய அரசு தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அந்த பெற்றோர் பிரதமருக்கும் நிதியமைச்சருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர். இதனால் சமூக வலைதளங்களில் மத்திய அரசுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications