ரூ.371 கோடி ஊழல்.. கைதான சந்திரபாபு நாயுடு மீதான வழக்கு ரத்தாகுமா? இன்று உச்சநீதிமன்றம் விசாரணை
டெல்லி: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை ஆந்திர உயர்நீதிமன்றம் ரத்து செய்ய மறுத்த நிலையில் அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராக இருப்பவர் சந்திரபாபு நாயுடு. இவர் ஆந்திர மாநிலத்தில் முதல்வராகவும் இருந்துள்ளார். தற்போது ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார்.

இந்நிலையில் தான் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த சமயத்தில் திறன் மேம்பாட்டு கழக திட்டத்தில் ரூ.371 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் மீது ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதன்பிறகு கடந்த மாதம் 9 ம் தேதி சந்திரபாபு நாயுடு அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தை நடத்தினர். அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் சந்திரபாபு நாயுடு மீது ஊழல் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினார். இது ஒருபுறம் இருக்க சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரிடம் 2 நாட்கள் ஊழல் தடுப்பு படையின் சிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை என்பது கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்தது. இதையடுத்து அவர் நீதிமன்ற காவலில் தற்போது சிறையில் உள்ளார். இந்நிலையில் தான் தன் மீதான இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் சந்திரபாபு நாயுடு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும், திடீரென வழக்கில் சந்திரபாபு நாயுடுவின் பெயர் இணைக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அதோடு எதிர்க்கட்சியான தெலுங்கு தேசத்தை முடக்கும் வகையில் சந்திரபாபு நாயுடு மீது சட்டவிரோதமாக வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட்டிடம் நேற்று சந்திரபாபு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை அவர் ஏற்றுக்கொண்டார். மேலும் இந்த மனுவை நாளை (அதாவது இன்று) விசாரிக்க சந்திரசூட் வாய்மொழியாக கூறினார். இதையடுத்து சந்திரபாபு நாயுடுவின் மனு என்பது உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு இன்று விசாரிக்க உள்ளது. இந்த அமர்வில் நீதிபதி எஸ்விஎன் பாட்டி இடம்பெற்றிருந்தார். இவர் ஆந்திராவை சேர்ந்தவர் என்பதால் வழக்கில் இருந்து தானாகவே அவர் விலகவதாக அறிவித்தார்.
முன்னதாக இந்த வழக்கை ரத்து செய்ய சந்திரபாபு தரப்பில் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது. இதையடுத்து தான் சந்திரபாபு நாயுடு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது, அந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications