பிரச்சனையை சரி செய்துவிட்டோம்.. இன்று மீண்டும் தொடங்கும் சந்திராயன் -2 கவுண்டவுன்.. இஸ்ரோ அசத்தல்
தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்ட சந்திராயன் -2 நாளை மதியம் ஏவப்பட்ட இருக்கிறது.
டெல்லி: தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்ட சந்திராயன் -2 நாளை மதியம் ஏவப்பட்ட இருக்கிறது. இதற்கான கவுண்டவுன் இன்று தொடங்குகிறது.
நிலவின் தென் துருவத்தில் என்ன இருக்கிறது? இந்த ஒரு கேள்விதான் சந்திராயன் -2 திட்டம் தொடங்குவதற்கு காரணமாக அமைந்தது. சந்திராயன் -1 திட்டம் வெற்றிகரமாக நிலவின் வட்டப்பாதையில் நிறுத்தப்பட்டது.
நிலவில் தண்ணீர் இருப்பதையும் கூட சந்திராயன் 1 தான் கண்டுபிடித்தது. அதன்பின்பே நாசா அதை உறுதி செய்தது. இந்த நிலையில்தான் சந்திராயன் -2 நிலவின் தென் பகுதியை குறி வைத்து இருக்கிறது.

என்ன சிக்கல்
நிலவின் தென் பகுதியில் என்ன இருக்கிறது. அதன் இருளான இடங்களில் என்ன காணப்படுகிறது. அங்கு தண்ணீர் இருக்குமா என்பதுதான் சந்திராயன் -2 திட்டத்தின் குறிக்கோள் ஆகும். இதுவரை உலகில் எந்த ஒரு நாடும் நிலவின் தென் பகுதியை குறி வைத்தது கிடையாது.

இந்தியா முதல்முறை
இந்த நிலையில் இந்தியாதான் முதல்முறையாக தற்போது தென் துருவ பகுதிக்கு இந்தியா சந்திராயன் -2வை அனுப்புகிறது. இதில் மூன்று முக்கியமான கருவிகள் அடங்கி உள்ளது. அதன்படி ஆர்பிட்டர் எனப்படும் நிலவை அதன் சுற்றுவட்டப்பாதையில் இருந்து ஆராயும் சாட்டிலைட் போன்ற கருவி ஒன்று.

இன்னும் இரண்டு
மேலும் நிலவில் இறங்கி அதை சோதனை செய்யும் பிரக்யான் என்று அழைக்கப்படும் ரோவர் ஒன்று. இந்த ரோவரை தரையிறக்க உதவும் விக்ரம் என்ற லேண்டர் கருவி ஒன்று. ஆகிய மூன்று முக்கிய சாதனங்களை சந்திராயன் -2 சுமந்து செல்கிறது. இந்தியா முதல்முறை இப்படி ரோவர் அனுப்புவது குறிப்பிடத்தக்கது.

பிரச்சனை ஆனது
சந்திராயன் -2 கடந்த வாரம் விண்ணில் ஏவப்படுவதாக இருந்தது. கடந்த வாரம் திங்கள் கிழமை அதிகாலை 3 மணிக்கு ஏவப்பட்ட வேண்டிய சந்திராயன் -2 தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது. கடைசி நேரத்தில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு காரணமாக சந்திராயன் -2 விண்ணில் ஏவப்படவில்லை.

சரி செய்யப்பட்டது
இந்த நிலையில் தற்போது இந்த பிரச்சனை எல்லாம் சரி செய்யப்பட்டு இருக்கிறது. சந்திராயன் -2ல் எரிபொருள் கசிவு சரி செய்யப்பட்டதை அடுத்து கடைசி கட்ட சோதனை மட்டும் நடந்து வருகிறது. இந்த கடைசி கட்ட சோதனைகள் முடிந்த பின் நாளை சந்திராயன் -2 விண்ணில் ஏவப்படும்.

இன்று மாலை
நாளை சந்திராயன் -2 ஏவப்பட உள்ள நிலையில் இன்று மாலை இதன் கவுண்டவுன் மீண்டும் தொடங்குகிறது. நாளை மதியம் 2.43 மணிக்கு சந்திராயன் -2 ஏவப்படும். செப்டம்பர் 6 மற்றும் 7 தேதிகளில் இதன் பிரக்யான் ரோவர் நிலவில் தரையிறங்கும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications