பிரச்சனையை சரி செய்துவிட்டோம்.. இன்று மீண்டும் தொடங்கும் சந்திராயன் -2 கவுண்டவுன்.. இஸ்ரோ அசத்தல்
தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்ட சந்திராயன் -2 நாளை மதியம் ஏவப்பட்ட இருக்கிறது.
டெல்லி: தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்ட சந்திராயன் -2 நாளை மதியம் ஏவப்பட்ட இருக்கிறது. இதற்கான கவுண்டவுன் இன்று தொடங்குகிறது.
நிலவின் தென் துருவத்தில் என்ன இருக்கிறது? இந்த ஒரு கேள்விதான் சந்திராயன் -2 திட்டம் தொடங்குவதற்கு காரணமாக அமைந்தது. சந்திராயன் -1 திட்டம் வெற்றிகரமாக நிலவின் வட்டப்பாதையில் நிறுத்தப்பட்டது.
நிலவில் தண்ணீர் இருப்பதையும் கூட சந்திராயன் 1 தான் கண்டுபிடித்தது. அதன்பின்பே நாசா அதை உறுதி செய்தது. இந்த நிலையில்தான் சந்திராயன் -2 நிலவின் தென் பகுதியை குறி வைத்து இருக்கிறது.

என்ன சிக்கல்
நிலவின் தென் பகுதியில் என்ன இருக்கிறது. அதன் இருளான இடங்களில் என்ன காணப்படுகிறது. அங்கு தண்ணீர் இருக்குமா என்பதுதான் சந்திராயன் -2 திட்டத்தின் குறிக்கோள் ஆகும். இதுவரை உலகில் எந்த ஒரு நாடும் நிலவின் தென் பகுதியை குறி வைத்தது கிடையாது.

இந்தியா முதல்முறை
இந்த நிலையில் இந்தியாதான் முதல்முறையாக தற்போது தென் துருவ பகுதிக்கு இந்தியா சந்திராயன் -2வை அனுப்புகிறது. இதில் மூன்று முக்கியமான கருவிகள் அடங்கி உள்ளது. அதன்படி ஆர்பிட்டர் எனப்படும் நிலவை அதன் சுற்றுவட்டப்பாதையில் இருந்து ஆராயும் சாட்டிலைட் போன்ற கருவி ஒன்று.

இன்னும் இரண்டு
மேலும் நிலவில் இறங்கி அதை சோதனை செய்யும் பிரக்யான் என்று அழைக்கப்படும் ரோவர் ஒன்று. இந்த ரோவரை தரையிறக்க உதவும் விக்ரம் என்ற லேண்டர் கருவி ஒன்று. ஆகிய மூன்று முக்கிய சாதனங்களை சந்திராயன் -2 சுமந்து செல்கிறது. இந்தியா முதல்முறை இப்படி ரோவர் அனுப்புவது குறிப்பிடத்தக்கது.

பிரச்சனை ஆனது
சந்திராயன் -2 கடந்த வாரம் விண்ணில் ஏவப்படுவதாக இருந்தது. கடந்த வாரம் திங்கள் கிழமை அதிகாலை 3 மணிக்கு ஏவப்பட்ட வேண்டிய சந்திராயன் -2 தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது. கடைசி நேரத்தில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு காரணமாக சந்திராயன் -2 விண்ணில் ஏவப்படவில்லை.

சரி செய்யப்பட்டது
இந்த நிலையில் தற்போது இந்த பிரச்சனை எல்லாம் சரி செய்யப்பட்டு இருக்கிறது. சந்திராயன் -2ல் எரிபொருள் கசிவு சரி செய்யப்பட்டதை அடுத்து கடைசி கட்ட சோதனை மட்டும் நடந்து வருகிறது. இந்த கடைசி கட்ட சோதனைகள் முடிந்த பின் நாளை சந்திராயன் -2 விண்ணில் ஏவப்படும்.

இன்று மாலை
நாளை சந்திராயன் -2 ஏவப்பட உள்ள நிலையில் இன்று மாலை இதன் கவுண்டவுன் மீண்டும் தொடங்குகிறது. நாளை மதியம் 2.43 மணிக்கு சந்திராயன் -2 ஏவப்படும். செப்டம்பர் 6 மற்றும் 7 தேதிகளில் இதன் பிரக்யான் ரோவர் நிலவில் தரையிறங்கும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications