Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பே.. 'கன்பார்ம் டிக்கெட்'.. எதிர்பார்த்த மிகப்பெரிய குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரயில்களில் பயணிக்க 60 நாள் முன்பே முன்பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. ஆனாலும் வெயிட்டிங் லிஸ்ட் தான் வருகிறது. ரயிலில் டிக்கெட் கிடைத்ததா அல்லது இல்லையா என்பதை அறிய ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரம் முன்பு தான் இறுதிப்பட்டியல் கிடைக்கும். அதன்பிறகு தான் பயணத்தை திட்டமிடமுடியும் என்கிற நிலை இருந்து வந்தது. இந்நிலையில் ரயில் புறப்படும் 24 மணி நேரத்திற்கு முன்னதாக உறுதிப்படுத்தப்பட்ட பயணிகள் பட்டியலை வெளியிடும் புதிய திட்டத்தை ரயில்வே நிர்வாகம் சோதனை அடிப்படையில் தொடங்கி இருக்கிறது.

நாட்டில் அதிகப்படியான மக்களால் விரும்பப்படும் போக்குவரத்தாக ரயில் போக்குவரத்து இருக்கிறது தொலைதூரம் செல்ல விரும்புவோருக்கு ரயில் தான் முதல் விருப்பமாக உள்ளது. ஆனால் போதிய ரயில்கள் இல்லாத காரணத்தால். ரயில்களில் டிக்கெட் அவ்வளவு எளிதாக கிடைப்பது இல்லை.. எனினும் தினமும் லட்சக்கணக்கான பயணிகள், முன்பதிவு செய்து ஏசி மற்றும் படுக்கை வசதி பெட்டிகளில் பயணிக்கிறார்கள். அதேபோல் முன்பதிவு செய்யாமல், அன்ரிசர்வ்டு பெட்டிகளிலும் பல லட்சம் பேர் தினமும் பயணித்து வருகின்றனர். டிக்கெட் கிடைக்காத காரணத்தால் தான் பலரும் அன்ரிசர்வ்டு பெட்டியில் பயணிக்கிறார்கள்.

Confirmed ticket passenger list released 24 hours before the train s departure Good News


ஸ்லீப்பர் கோச்

ரயில்களில் ஸ்லீப்பர் கோச்சில் கட்டணம் என்பது மிக குறைவு ஆகும். அதுதான் பலரும் ரயிலில் பயணிக்க விரும்ப முக்கிய காரணம் ஆகும். அடுத்ததாக வயதானவர்கள், பெண்கள், குழந்தைகளுக்கு அதிக சவுகரியம் இருக்கும். உடல்களில் அலுப்பே தெரியாது. நான்கு நாட்கள் பயணித்தாலும் வீட்டில் இருப்பது போல் தான் இருக்கும். ஆனால் பேருந்தில் 12 மணி நேரம் பயணித்தாலே ஒரு நாள் முழுக்க அலுப்பு இருக்கும். அடிக்கடி நடந்து செல்ல முடியும், கழிவறை உள்பட பல்வேறு வசதிகள் காரணமாக நாள்தோறும் ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

24 மணி நேரம் முன்பு கன்பார்ம் டிக்கெட்

வடமாநிலங்களில் இருந்து தென் மாநிலங்கள் வருவதற்கும், தென் மாநிலங்களில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லவும் ரயில் போக்குவரத்து மிகப்பெரிய உதவியாக இருக்கிறது. ஆனால் டிக்கெட் கிடைப்பது உறுதி செய்ய போராட வேண்டிய நிலை இருக்கிறது. கடைசி 4 மணி நேரத்தில் தான் டிக்கெட் கிடைக்குமா இல்லையா என்பதை அறியும் வகையில் ரயில் பயணிகள் இறுதிப்பட்டியல் வெளியிடப்படுகிறது. இதனால் பயண திட்டத்தில் பலருக்கும் சிக்கல் ஏற்படுகிறது. இதை சரி செய்யும் விதமாக திட்டத்தை ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி உறுதிப்படுத்தப்பட்ட பயணிகள் பட்டியலை அவர்கள் ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்னரே தெரிந்து கொள்ளும் வகையில் புதிய திட்டத்தினை ரயில்வே எடுத்துள்ளது

சோதனை அடிப்படையில் தொடக்கம்

முதல்கட்டமாக ஜூன் 6ம் தேதி முதல் சோதனை அடிப்படையில் இந்த திட்டத்தை ரயில்வே நிர்வாகம் தொடங்கி இருக்கிறது. மேற்கு ரயில்வே மண்டலத்தில் பிகானோர் பகுதியில் இந்த திட்டம் ஆரம்ப கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.அதன்படி ரயில் புறப்படும் 24 மணி நேரம் முன்பாக உறுதிப்படுத்தப்பட்ட பயணிகள் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதன் மூலம் பயணிகள் தங்கள் பயணத்தில் ஏதேனும் மாற்றம், மீண்டும் பயண தேதியை திட்டமிட முடிகிறது.

விரைவில் நாடு முழுவதும் அமல்

பயணிகளின் ரயில் பயணத்தை எளிதாக்கும் நோக்கத்தில் இந்த திட்டம் சோதனை முறையில் குறிப்பிட்ட பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறும் ரயில்வே அதிகாரிகள், இந்த திட்டம் பற்றி பொதுமக்களின் கருத்துகள் முழுவதுமாக அறியப்பட்டு அது தொடர்பாக ரயில்வே நிர்வாகத்திடம் பரிந்துரை அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர் இது குறித்து உரிய நடைமுறைகள் எடுக்கப்பட்டு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் நாடு முழுவதும் வெளியாகலாம் என கூறினார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+