இந்தியாவில் வேகமாக குறையும் கொரோனா.. 306,465 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள்
டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றால் ஒரு கோடியே 31 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 145,513 பேர் பலியாகி உள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 306,465 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
உலகில் கொரோனா தொற்றால் 7 கோடியே 65 லட்சத்து 88 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 16 லட்சத்து 91 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 5 கோடியே 37லட்சத்து 18 ஆயிரம் பேர் மீண்டனர். தற்போது கொரோனா பாதிப்புடன் தற்போது 21,179,536 சிகிச்சை பெற்று வருகிறார்கள்

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் 18,061,780 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் கொரோனா தொற்றால் ஒரு கோடியே 31 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் 72லட்சம் பேரும், ரஷ்யாவில் 28 லட்சம் பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் கொரோனாவால் 173,427 பேர் பாதிக்கப்பட்டனர். பிரேசிலில் 49,243 பேரும், ரஷ்யாவில் 28,209 பேரும், இங்கிலாந்தில் 27,052 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 26,834 பாதிக்கப்பட்டனர்.

உலகிலேயே அதிகபட்சமாக அமெக்காவில் நேற்று ஒரே நாளில் 2,497 பேர் கொரோனாவால் பலியாகினர். அதற்கு அடுத்தபடியாக மெக்ஸிகோவில் 762 பேரும், பிரேசிலில் 669 பேரும், ரஷ்யாவில் 585 பேரும் தொற்றால் பலியாகினர். இந்தியாவில் கொரோனா தொற்றால் நேற்று 342 பேர் பலியாகினர். உலக நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் தொற்று பாதிப்பும், பலி எண்ணிக்கையும் வேகமாக குறைந்து வருகிறது.












Click it and Unblock the Notifications