இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,058 பேருக்கு கொரோனா.. கேரளாவில்தான் அதிகம்.. மோசமாகும் நிலை
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,058 கொரோனா கேஸ்கள் ஏற்பட்டுள்ளது
Recommended Video
இந்தியாவில் அடுத்த சில வாரங்களில் மூன்றாம் அலை ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தினசரி கொரோனா கேஸ்கள் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 437,860 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 457 பேர் பலியாகி உள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 32,694,188 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 31,881,128 பேர் குணமடைந்து உள்ள நிலையில் 375,200 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் இதுவரை 64,52,273 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு புதிதாக 4831 பேர் கொரோனா காரணமாக பாதிப்பு அடைந்துள்ளனர். 51,821 பேர் மகாராஷ்டிராவில் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். மகாராஷ்டிராவில் 1,37,026 பேர் இதுவரை மொத்தமாக பலியாகி உள்ளனர்.62,59,906 பேர் அங்கு இதுவரை குணமடைந்து உள்ளனர் .

கேரளா
கேரளாவில்தான் இந்தியாவிலேயே அதிக அளவில் தினசரி கேஸ்கள் பதிவாகி வருகிறது. இந்தியாவில் பதிவாகும் மொத்த கேஸ்களில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக கேரளாவில் மட்டும் பதிவாகிறது. கேரளாவில் இதுவரை 39,77,572 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு புதிதாக 31265 பேர் கொரோனா காரணமாக பாதிப்பு அடைந்துள்ளனர். தொடர்ந்து நான்காவது நாளாக கேரளாவில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான கேஸ்கள் பதிவாகி உள்ளது. 2,04,923 பேர் கேரளாவில் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கேரளாவில் 20,466 பேர் இதுவரை மொத்தமாக பலியாகி உள்ளனர்.37,51,666 பேர் அங்கு இதுவரை குணமடைந்து உள்ளனர்.

கர்நாடகா
கர்நாடகாவில் இதுவரை 29,45,993பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு புதிதாக 1229 பேர் கொரோனா காரணமாக பாதிப்பு அடைந்துள்ளனர். 18,897 பேர் கர்நாடகாவில் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கர்நாடகாவில் 37,261 பேர் இதுவரை மொத்தமாக பலியாகி உள்ளனர். 28,89,809 பேர் அங்கு இதுவரை குணமடைந்து உள்ளனர்.

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் தொடர்ந்து கொரோனா கேஸ்கள் சரிந்து வருகிறது. தினசரி கேஸ்கள் தொடர்ந்து 1600க்கும் குறைவாகவே பதிவாகி வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 26,10,299 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு புதிதாக 1551 பேர் கொரோனா காரணமாக பாதிப்பு அடைந்துள்ளனர். 17,559 பேர் தமிழ்நாட்டில் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். தமிழ்நாட்டில் 34,856 பேர் இதுவரை மொத்தமாக பலியாகி உள்ளனர். 25,57,884 பேர் அங்கு இதுவரை குணமடைந்து உள்ளனர்.

ஆந்திர பிரதேசம்
ஆந்திர பிரதேசத்தில் இதுவரை 20,10,566 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு புதிதாக 1321 பேர் கொரோனா காரணமாக பாதிப்பு அடைந்துள்ளனர். 14,853 பேர் ஆந்திர பிரதேசத்தில் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். ஆந்திர பிரதேசத்தில் 13,807 பேர் இதுவரை மொத்தமாக பலியாகி உள்ளனர். 19,81,906 பேர் அங்கு இதுவரை குணமடைந்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications