6 அடி சமூக இடைவெளியே போதாது.. சுவாச துளிகள் மூலம் 19 அடியைத்தாண்டி பரவும் கொரோனா.. ஆய்வில் பகீர்
டெல்லி: குளிர்காலத்தில் சுவாச துளிகள் மூலம் கொரோனா வைரஸ் அதிகமாக பரவும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் தற்போது இந்தியா போன்ற நாடுகளில் குறையத் தொடங்கிவிட்டது. அதே நேரத்தில் டிசம்பர் மாதம் முதல் குளிர்காலம் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் யானிங் ஜூ உள்ளிட்டவர்கள் கொரோனா பரவல் தொடர்பாக ஒரு ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை நானோ லெட்டர்ஸ் பத்திரிகையில் வெளியிட்டுள்ளார்கள்.

நோய் கட்டுப்பாட்டு மையம்
இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், பெரும்பாலான சூழ்நிலைகளில் நோய் கட்டுப்பாட்டு மையம் பரிந்துரைத்துள்ள 6 அடி தனி மனித இடைவெளி என்ற தொலைவுக்கு அப்பாலும் சுவாச நீர்த்துளிகள் பயணிப்பதை நாங்கள் கண்டறிந்து இருக்கிறோம்.

சுவாச நீர்த்துளிகள்
குளிரான சூழல்களில் சுவாச நீர்த்துளிகள் தரையில் விழுவதற்கு முன் 6 மீட்டர் தாண்டி, அதாவது 19.7 அடி பயணிக்கின்றன. இறைச்சிகளை பதப்படுத்தும் ஆலைகளில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவும் என வந்த புகார்களுக்கு இது உரிய விளக்கமாக கருதப்படுகிறது.

கொரோனா அதிகம்
குளிர்காலத்தில் சுவாச துளிகள் மூலம் கொரோனா அதிகமாக பரவலாம். அது போல் சூடான வறண்ட இடங்களில் சுவாச நீர்த்துளிகள் எளிதில் ஆவியாகி விடுகின்றன. இத்தகைய நிலைமைகளில் ஆவியாகும் நீர்த்துளிகள் பேசும்போதும், இருமும்போதும் தும்மும்போதும் சுவாசத்தின் ஒரு பகுதியாக தெளிக்கப்படும் தூசுகள் மூலம் இந்த வைரஸ் பரவும்.

குளிர்காலத்தில்
இவை 10 மைக்ரான்களை காட்டிலும் சிறியவை ஆகும். இவை காற்றில் பல மணி நேரம் இடைநிறுத்தப்படலாம். குளிர்காலத்தில் நீர்த்துளி அடுத்தவர் மீது தெறிப்பது மிகவும் ஆபத்தானது. எப்போதுமே அறை குளிர்ச்சியாகவும், ஈரப்பதமிக்கதாவும் இருந்தால், அதிக தனிமனித இடைவெளியை பராமரிக்க வேண்டும். தற்போது பராமரிக்கும்படி கூறப்பட்ட 6 அடி தொலைவு போதாது என கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications