மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி
டெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
72 வயதாகும் சீதாராம் யெச்சூரி சென்னையில் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். இவர்களது பெற்றோர் ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடாவைச் சேர்ந்தவர் ஆவார். சீதாராம் யெச்சூரி மாணவ பருவத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் மேற்கு வங்க மாநிலத்தில் பல ஆண்டுகள் மாநிலங்களின் எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தொடர்ந்து மூன்று முறை தேர்வு செய்யப்பட்ட சீதாராம் யெச்சூரிக்கு தீவிர காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று இரவு டெல்லி எய்மஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டார்.
சீதாராம் யெச்சூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட உடனயே அவருக்கு மருத்துவர்கள் பல்வேறு பரிசோதனைகளை செய்தனர். அங்கு அவருக்கு நிமோனியா பாதிப்பு இருந்தது தெரியவந்ததால் உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
அவருக்கு உடல் நிலையில தீவிரமான பாதிப்பு இல்லை என்றும், நிமோனியா காய்ச்சல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அண்மையில் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு சமீபத்தில் தான் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications