இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம்.. டெல்லி நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர்.. குற்றச்சதி வழக்கு பதிவு!
டெல்லி: இரட்டை இலை சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் ஒரு அணியாகவும் எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் மற்றொரு அணியாகவும் பிரிந்து செயல்படத் தொடங்கினர்.
அப்போது, இரு தரப்பிலுமே அதிமுகவின் சின்னமான இரட்டை இலை தங்களுக்குத்தான் சொந்தமானது என்று தேர்தல் ஆணையத்தில் உரிமை கோரப்பட்டது.

சின்னம்
இதையடுத்து இரட்டை இலை சின்னத்தை, முடக்குவதாக, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த சூழ்நிலையில், இரட்டை இலை சின்னத்தை தங்கள் அணிக்கு, ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தின் சில அதிகாரிகளுக்கு டிடிவி தினகரன் தரப்பு லஞ்சம் கொடுத்ததாக செய்திகள் வெளியாகின. இந்தக் குற்றச்சாட்டின் பேரில், தினகரன், கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.

அதிரடி
இந்த வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 17ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தினகரன் லஞ்சம் கொடுக்க முயற்சி செய்ததற்கு போதிய ஆதாரங்கள் இருப்பதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிட்டார் நீதிபதி அருண் பரத்வாஜ். குற்றச்சாட்டு பதிவு செய்யக்கூடிய டிசம்பர் 4ம் தேதி தினகரன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
|
நேரில் ஆஜர்
இந்த உத்தரவை ஏற்று பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று தினகரன் நேரில் ஆஜரானார். அப்போது சட்டப்பிரிவு 120பி (குற்றச் சதி) பிரிவு 201 (ஆதாரங்களை அழித்தல்) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கையெழுத்திட்டார்
குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது தொடர்பான ஆவணத்தில் கையெழுத்து இட்டு பிறகு கிளம்பிச்சென்றார் தினகரன். இந்த வழக்கின், விசாரணை டிசம்பர் 17-ம் தேதி முதல் மீண்டும் விசாரிக்கப்பட உள்ளது. இதனால் தினகரனுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications