Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரோட்டில் நமாஸ் செய்த 2 பேரை எட்டி உதைத்த போலீஸ் அதிகாரி! கடும் வாக்குவாதம்.. பாய்ந்த ஆக்ஷன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மசூதியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் ரோட்டில் நமாஸ் செய்த இஸ்லாமியர்களை ஆக்ரோஷமாக போலீஸ் அதிகாரி ஒருவர் எட்டி உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் போலீஸ்காரரை சூழ்ந்து வாக்குவாதம் செய்த நிலையில் அவர் மீது அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது.

இன்று வெள்ளிக்கிழமையாகும். இஸ்லாமியர்களை பொறுத்தவரை வெள்ளிக்கிழமை தொழுகை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்தியா முழுவதும் உள்ள மசூதிகளில் இன்று மதியம் வழக்கம்போல் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர்.

Delhi Cop suspended after he kicking muslim men who offering Namaz on friday Prayers

டெல்லி இன்டர்லாக் பகுதியில் உள்ள மசூதியல் வழக்கத்தை விட அதிகளவில் இஸ்லாமியர்கள் தொழுகைக்காக கூடினர். இதனால் மசூதியில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து இஸ்லாமியர்கள் அந்த பகுதியில் உள்ள ரோட்டில் தொழுகை நடத்தினர்.

இதுபற்றி அறிந்தவுடன் போலீஸ்காரர்கள் அங்கு சென்றனர். அப்போது போலீஸ்காரர் ஒருவர் அவர்களை கலைந்து செல்லும்படி கூறினார். ஆனால் அவர்கள் தொழுகையில் மும்முரமாக இருந்தனர். இதனால் ஆக்ரோஷமான போலீஸ் அதிகாரி தொழுகை செய்த இஸ்லாமியர்களை காலால் எட்டி உதைத்தார். 2 பேரை எட்டி உதை்த போலீஸ் அதிகாரி ஒருவரின் கழுத்தில் கையால் தாக்கினார்.

Delhi Cop suspended after he kicking muslim men who offering Namaz on friday Prayers

இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அங்கிருந்தவர்கள் ஒன்று கூடி போலீஸ் அதிகாரியின் செயலை கண்டித்தனர். மேலும் அவர்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இந்த வீடியோவை காங்கிரஸ் ராஜ்யசபா எம்பி இம்ரான் பிரதாப்கார்க் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர், ‛‛அடிப்படை மனிதாபிமானம் என்பது பற்றி அறியாமல் இந்த டெல்லி போலீஸ்காரர் நமாஸ் செய்த நபரை எட்டி உதைத்துள்ளார். இவரது இதயத்தில் நிறைந்திருக்கும் இந்த வெறுப்பு என்ன?. இவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதோடு, பணி நீக்கம் செய்ய வேண்டும்'' என கூறியிருந்தார்.

இதுபற்றி டெல்லி வடக்கு துணை போலீஸ் ஆணையர் எம்கே மீனா கூறுகையில், ‛‛இந்த சம்பவம் தொடர்பான விசாரணை என்பது தொடங்கப்பட்டுள்ளது. இந்த போலீஸ்காரர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட உள்ளது'' என்றார். இந்த சம்பவத்தால் டெல்லி இன்டர்லாக் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+