Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எந்த நேரத்திலும் டெல்லிக்கு ஆபத்து.. பெருகும் யமுனை.. அபாய எச்சரிக்கை விடுத்த மத்திய நீர் ஆணையம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: யமுனையில் நீர்மட்டம் அதிகரித்து அபாய அளவை எட்டி வரும் நிலையில், யமுனையில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால், டெல்லிக்கு எந்த நேரத்திலும் பாதிப்பு ஏற்படலாம் என மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த 1 வாரத்துக்கு மேலாக மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் கங்கை மற்றும் யமுனை ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனால் தலைநகர் டெல்லியின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

Delhi floods: Government on high-alert as yamuna rises

இந்நிலையில் டெல்லியில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளம் குறைந்திருந்த யமுனை ஆற்றில் மீண்டும் தண்ணீர் அதிகரித்துள்ளது. யமுனை ஆற்றின் நீர்மட்டம் மீண்டும் அபாய அளவை எட்டியுள்ளது. அதன்படி, நேற்று மாலை நிலவரப்படி யமுனை ஆற்றின் நீர்மட்டம் 205.16 மீட்டர் ஆக உள்ளது.

உத்தரகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து யமுனையில் நீர் வெளியேற்றம் அதிகரிப்பதால் டெல்லியில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இமாச்சல பிரதேசம், உத்தரகாண்டில் கனமழை தொடர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, எந்த நேரத்திலும் டெலிக்கு பாதிப்பு ஏற்படலாம் என மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய நீர் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட யமுனையின் நீர்பிடிப்பு குதிகளில் மழை பெய்வதால், நதியின் நீர்மட்டத்தில் ஏற்ற இறக்கம் நிலவுகிறது. இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில், நாளை மறுநாள் வரை கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. யமுனையில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால், டெல்லிக்கு எந்த நேரத்திலும் பாதிப்பு ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி வருவாய்த் துறை அமைச்சர் அதிஷி, யமுனை ஆற்றின் நீர்மட்டம் 206.7 மீட்டருக்கு உயர்ந்தால் யமுனை நதியின் கரையோரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் வாய்ப்பு உள்ளது என்று எச்சரித்தார். டெல்லி மக்களை வெளியேற்றுவதற்கு அரசு தயாராக இருப்பதாகவும், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அமைச்சர் உறுதியளித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+