தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிகாரம்.. டெல்லி போலீசுக்கு உத்தரவு.. உண்மை என்ன?
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க டெல்லி காவல் ஆணையருக்கு அதிகாரம் அளித்து துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி: தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க டெல்லி காவல் ஆணையருக்கு அதிகாரம் அளித்து துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் இது நான்கு வருடங்களுக்கு ஒரு முறை பிறப்பிக்கப்படும் இயல்பான உத்தரவுதான் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது .
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாட்டு முழுக்க மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சென்னையில் அவ்வப்போது மாணவர்கள் போராடி வருகிறார்கள். இன்னொரு பக்கம் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக போராடி வருகிறது.

இந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தை நாடு முழுக்க பல்வேறு இடங்களில் பலர் முன்னின்று நடத்தி வருகிறார்கள். டெல்லியில்தான் இந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டம் உச்சம் அடைந்துள்ளது. டெல்லியில் தினமும் பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.
ஒரு பக்கம் ஷாகின் பாக் பகுதியில் பெண்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் ஜேஎன்யூ கல்வி மையத்தில் மாணவர்கள் போராடி வருகிறார்கள். அவ்வப்போது ஜம்மா மசூதி பகுதியிலும் போராட்டம் நடந்து வருகிறது.
இந்த நிலையில்தான் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க டெல்லி காவல் ஆணையருக்கு அதிகாரம் அளித்து துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். 19.01.2020 முதல் 18.04.2020 வரை யாரை வேண்டுமானாலும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் செய்யலாம் என்று துணை நிலை ஆளுநர் அணில் பைஜால் உத்தரவிட்டுள்ளார்.
இது இணையத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லி போராட்டங்களை முடக்க இப்படி செய்கிறார்களா என்று கேள்வி எழுந்தது. இந்த நிலையில் இது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பிறப்பிக்கப்படும் இயல்பான உத்தரவுதான் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது .
நான்கு மாதங்களுக்கு ஒரு முறை எல்லா மாநில அரசும் போலீசுக்கு இந்த உத்தரவை பிறப்பிக்கும். டெல்லியில் போலீஸ் உள்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதனால் அம்மாநில துணை நிலை ஆளுநர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications