டிரீம்ஃபோக்ஸ் உடன் உறவை துண்டிக்கும் ஐசிஐசிஐ & பிற வங்கிகள்.. விமான நிலையங்களில் வரும் மாற்றம்!
டெல்லி: ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் மாஸ்டர்கார்டு உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய வங்கிகள் மற்றும் கார்டு நெட்வொர்க்குகள் ட்ரீம்ஃபோல்க்ஸ் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் இருந்து விலகத் திட்டமிட்டுள்ளன. விமான நிலைய லவுஞ்ச் ஆபரேட்டர்களுடன் நேரடி ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த முடிவை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பல வங்கிகளும் இதே பாதையைப் பின்பற்றக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சேவை பாதிப்பு மற்றும் மாற்று ஏற்பாடுகள்
கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி, பல்வேறு விமான நிலையங்களில் லவுஞ்ச் பயன்பாட்டு சேவைகளை வழங்கி வரும் ட்ரீம்ஃபோல்க்ஸ் நிறுவனத்தின் சேவையில் தற்காலிக இடையூறு ஏற்பட்டது. இதனால், ஆயிரக்கணக்கான வங்கி மற்றும் கார்டு நெட்வொர்க் வாடிக்கையாளர்கள் லவுஞ்ச் அணுகலில் பாதிப்பை சந்தித்தனர்.

இந்தச் பிரச்சினை அடுத்த நாளே சரி செய்யப்பட்டாலும், வங்கிகள் மற்றும் கார்டு நெட்வொர்க்குகள் மாற்று வழிகளை ஆராயத் தூண்டியது என்று இந்த விவகாரம் குறித்து அறிந்த முக்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் மாஸ்டர்கார்டு ஆகியவை இந்த முயற்சியில் முன்னணியில் உள்ளன. மேலும் பல வங்கிகள் இந்த வரிசையில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ஆக்சிஸ் வங்கி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. ஐசிஐசிஐ வங்கி மற்றும் மாஸ்டர்கார்டு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களுக்குப் பதில்கள் ஏதும் வரவில்லை.
ட்ரீம்ஃபோல்க்ஸ் நிறுவனத்தின் முதலீட்டாளர் தொடர்பு மற்றும் அதன் இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருந்த மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களுக்கும் உடனடியாக எந்த பதிலும் கிடைக்கவில்லை.
சந்தை ஆதிக்கம் மற்றும் பாதிப்புகள்
இந்தியாவில் உள்ள முக்கிய விமான நிலைய லவுஞ்ச் ஆபரேட்டர்களில் ஒன்றாக ட்ரீம்ஃபோல்க்ஸ் விளங்குகிறது. இந்தியாவில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கான லவுஞ்ச் பயன்பாட்டு சந்தையில் 90 சதவீத பங்குகளை இந்நிறுவனம் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
செப்டம்பரில் ஏற்பட்ட சேவை இடையூறு காரணமாக, நாடு முழுவதும் விமான பயணிகள் விமான நிலைய லவுஞ்சுகளை அணுகுவதில் சிக்கல்களை எதிர்கொண்டனர். இந்தியாவில் உள்ள 34 விமான நிலையங்களில் குறைந்தது 49 லவுஞ்சுகள் திடீரென மூடப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
கொல்கத்தா மற்றும் சென்னை விமான நிலைய லவுஞ்சுகளை நிர்வகிக்கும் டிராவல் ஃபுட் அண்ட் சர்வீசஸ் நிறுவனம், ட்ரீம்ஃபோல்க்ஸ் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் ஏழு விமான நிலையங்களை நிர்வகிக்கும் அதானி குழுமம் இதுகுறித்து ஒரு அறிக்கையில், "இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் பயணிகள் லவுஞ்ச் அணுகலில் இடையூறுகளை எதிர்கொண்டு வருகின்றனர். பல வங்கிகளுடன் இணைந்து லவுஞ்ச் அணுகு சேவையை வழங்கி வரும் ட்ரீம்ஃபோல்க்ஸ் நிறுவனம், விமான நிலையங்களுடனான சேவை ஒப்பந்தங்களை மீறி சேவைகளை நிறுத்தியதே இதற்குக் காரணம்" என்று குறிப்பிட்டிருந்தது.
ஜிஎம்ஆர், அதானி மற்றும் டிஎஃப்எஸ் போன்ற ஆபரேட்டர்கள் இந்த லவுஞ்ச் வசதிகள் மூலம் சுமார் 80-85 சதவீத பயணிகளின் போக்குவரத்தை நிர்வகிக்கின்றனர். தற்போது, ட்ரீம்ஃபோல்க்ஸ் இந்த அனைத்து லவுஞ்சுகளுக்கும் மூன்றாம் தரப்பு ஒருங்கிணைப்பாளராக செயல்படுகிறது.
ட்ரீம்ஃபோல்க்ஸ் நிறுவனத்தின் விளக்கம்
செப்டம்பர் 22, 2024 அன்று ட்ரீம்ஃபோல்க்ஸ் வெளியிட்ட அறிக்கையில், "சேவையில் ஏற்பட்ட தற்காலிக இடையூறை சரி செய்து வருகிறோம். அனைத்து ஒப்பந்தங்களும் முழுமையாக அமலில் உள்ளன. அதானி விமான நிலையங்களில் ஏற்பட்ட ஒருங்கிணைப்பு சிக்கலை எங்கள் குழு வெற்றிகரமாக தீர்த்து வைத்துள்ளது. இதன் விளைவாக, அனைத்து கிரெடிட், டெபிட் மற்றும் உறுப்பினர் அட்டைகள் உட்பட அனைத்து தகுதியான அட்டைகளும் லவுஞ்ச்களில் ஏற்றுக்கொள்ளப்படும்" என்று அறிவித்தது.
வங்கி மற்றும் விமான நிலையங்களின் நேரடி முயற்சி
சேவை பாதிப்பு காரணமாக அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில வங்கிகள் அதானி விமான நிலையங்களில் லவுஞ்ச் அணுகலுக்காக அதானி டிஜிட்டலை அணுகியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த இடையூறு காரணமாக, பயணிகளுக்கு தடையற்ற சேவைகளை வழங்குவதற்காக விமான நிலையங்கள் வங்கிகளுடன் நேரடியாக இணைந்து செயல்படத் தொடங்கின.
ட்ரீம்ஃபோல்க்ஸ் நிறுவனத்தின் பின்னணி
2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ட்ரீம்ஃபோல்க்ஸ், இந்தியாவில் விமான நிலைய சேவைகளை ஒருங்கிணைக்கும் முன்னணி நிறுவனமாகும். இது பயணிகளுக்கான பல்வேறு விமான நிலைய சேவைகளை அணுகுவதற்கு ஒரு தளத்தை வழங்குகிறது. வங்கிகள், கார்டு நெட்வொர்க்குகள் மற்றும் விமான நிறுவனங்கள் இதன் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபத்தில் கணிசமான பகுதி விமான நிலைய லவுஞ்ச் சேவைகள் மூலம் கிடைக்கிறது.
2025 நிதியாண்டில், இந்நிறுவனம் ரூ.1,292 கோடி வருவாய் ஈட்டியுள்ளது, இது 14 சதவீத வளர்ச்சியாகும். இருப்பினும், நிகர லாபம் 5 சதவீதம் குறைந்து ரூ.65 கோடியாக இருந்தது. முன்னதாக, 2025ஆம் ஆண்டில், லவுஞ்ச் அல்லாத சேவைகள் மூலம் வருவாயை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக இந்நிறுவனம் அறிவித்தது. விமான நிலையத்தில் உணவு மற்றும் பானங்கள், ஸ்பா மற்றும் உடற்கட்டமைப்பு, உதவி செய்தல் மற்றும் விமான நிலைய இடமாற்றங்கள் போன்ற பிற சேவைகளையும் இந்நிறுவனம் வழங்கி வருகிறது.
இந்திய வங்கிகள் மற்றும் விமான நிலைய லவுஞ்ச் ஆபரேட்டர்களுடனான ஒப்பந்தங்கள் தற்போது மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக, பயணிகளுக்கான விமான நிலைய லவுஞ்ச் சேவைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படலாம்.












Click it and Unblock the Notifications