மத ரீதியில் பிரச்சாரம்.. மோடிக்கு எதிராக புகார்.. நோட்டீஸ் அனுப்ப தேர்தல் ஆணையம் முடிவு
டெல்லி: வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிடுவதை மதரீதியில் விமர்சனம் செய்ததாக பிரதமர் மோடிக்கு எதிராக எழுந்துள்ள புகாருக்கு, தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளது
மதம் சார்ந்த தேர்தல் பிரசாரத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் தோல்வி ஏற்படும் என்ற பயம் காரணமாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடுவதாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

தேர்தல் விதிமுறை மீறல்
இந்த நிலையில், கடந்த 1 ம் தேதி வார்தாவில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, வயநாடு தொகுதியில் சிறுபான்மை இன மக்கள் அதிகமாக உள்ளனர். அவர்களை நம்பித்தான், ராகுல் வயநாடு தொகுதிக்கு சென்றுள்ளதாக கூறினார். இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய பேச்சு என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திட்டமிட்டு பிரச்சாரம்
சாதி, மதத்தை குறிப்பிட்டு யாரும் தேர்தல் பிரசாரம் செய்யக் கூடாது என்பது தேர்தல் நடத்தை விதிகளில் ஒன்றாகும். இதனை, கண்டு கொள்ளாமல் பிரதமர் மோடி திட்டமிட்டு பிரச்சாரம் மேற்கொண்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் புகார்
மேலும், இந்துக்களை காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது என்றும், இந்து பயங்கரவாதம் என்று சொல்லப்படுவதை ஏற்க இயலாது என்றும் மோடி பேசியதாகவும், குறிப்பிட்டு காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

மதம் சார்ந்த தேர்தல் பிரச்சாரம்
இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியின் மதம் சார்ந்த தேர்தல் பிரச்சாரத்துக்கு விளக்கம் கேட்டு பிரதமர் மோடிக்கும், மகாராஷ்டிரா மாநில தேர்தல் அதிகாரிக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications