டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லோக்சபா தேர்தல்.. இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நிறைவு.. மொத்தமாக 66.36% வாக்குகள் பதிவு!

Google Oneindia Tamil News

டெல்லி: 7 மாநிலங்களிலும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் இறுதி கட்ட வாக்குப் பதிவு காலை 7 மணி தொடங்கிய நிலையில் மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. இதில் 62.87% வாக்குகள் பதிவாகி உள்ளது. மொத்தமாக அனைத்து கட்டங்களையும் சேர்த்து 66.36% வாக்குகள் பதிவாகி உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது.

Final Phase Lok sabha elections 2019: 59 constituencies are going to face election today

இந்த நிலையில் மொத்தமுள்ள 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களுக்கு தேர்தல் நடைபெற்று வந்தன. இன்றைய தினம் பீகார், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் விடுபட்ட தொகுதிகளுக்கும் சண்டீகர் யூனியன் பிரதேசத்துக்கும் இன்று வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. இது மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.

மொத்தம் 59 தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் சில மாநிலங்களில் மாலை 4 மணிக்கே தேர்தல் முடிவடைந்தது. பீகாரில் உள்ள சில தொகுதிகளிலும் ஜார்க்கண்டில் உள்ள சில தொகுதிகளிலும் உ.பி.யில் உள்ள சில தொகுதிகளிலும் மாலை 4 மணிக்கே தேர்தல் முடிவடைந்தது.

இதில் மொத்தமாக 62.87% வாக்குகள் பதிவாகி உள்ளது. உத்தர பிரதேசத்தில் 57.86% வாக்குகள் பதிவாகி உள்ளது. இமாச்சலப்பிரதேசத்தில் 67.89% வாக்குகள் பதிவு பதிவாகி உள்ளது. மொத்தமாக அனைத்து கட்டங்களையும் சேர்த்து 66.36% வாக்குகள் பதிவாகி உள்ளது.

கடைசி கட்ட தேர்தலில் ஜார்க்கண்டில் 71.16% வாக்குகள் பதிவு பதிவாகி உள்ளது.சண்டிகரில் 63.57% வாக்குகள் பதிவு பதிவாகி உள்ளது. பஞ்சாப்பில் 62.45% வாக்குகள் பதிவு பதிவாகி உள்ளது.

மேற்கு வங்கத்தில் 73.51% வாக்குகள் பதிவு பதிவாகி உள்ளது. பீகாரில் 53.81% வாக்குகள் பதிவு பதிவாகி உள்ளது மத்திய பிரதேசத்தில் 71.44% வாக்குகள் பதிவு பதிவாகி உள்ளது.

இதில் மிக முக்கியத் தொகுதியாக பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி தொகுதிக்கும் இன்று தான் தேர்தல் நடைபெற்றது. வரும் 23-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கேதார்நாத் சென்று அங்குள்ள குகையில் இன்று காலை வரை தியானத்தில் இருந்தார். இவரது பிரார்த்தனை கைகொடுக்குமா என்பது 23-ஆம் தேதி தெரிந்துவிடும்.

English summary
The final phase of voting in the Lok Sabha Election 2019 is going to take place on today in 59 constituencies across seven states and one Union Territory.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X