இதுதான் இத்தனை பிரச்சினைக்கு காரணமா.. ஜிலேபியே சாப்பிட மாட்டேன்.. கம்பீர் அதிரடி
Recommended Video
டெல்லி: நான் சாப்பிட்ட ஜிலேபியால்தான், டெல்லியில் காற்று மாசு அதிகரித்திருந்தால் நான் ஜிலேபி சாப்பிடுவதையே விட்டுவிடுகிறேன் என்று, முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் காற்றுமாசு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்துவிட்டது. இந்த நிலையில், டெல்லியில் கடந்த 15ம் தேதி காற்றுமாசு குறித்த நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது.
முக்கிய அதிகாரிகள் மற்றும் எம்.பி.க்கள் உட்பட மொத்தம் 29 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் வெறும் 4 பேர் மட்டுமே இதில் கலந்து கொண்டனர்.

கம்பீர் மிஸ்சிங்
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கிழக்கு டெல்லியின் பாஜக எம்.பி. கவுதம் கம்பீருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் அவர், இந்தியா-வங்கதேசம் இடையே மத்திய பிரதேசத்தின் இந்தூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிக்கு டிவி வர்ணனையாளராக சென்று விட்டார்.

ஜிலேபி
கவுதம் கம்பீரின் இந்த செயல் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. கவுதம் கம்பீரை காணவில்லை என்று டெல்லியில் பொதுமக்களாலும், எதிர்க்கட்சிகளாலும், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தூரில், அவர் ஜாலியாக சிரித்தபடி ஜிலேபி சாப்பிட்ட போட்டோவை அதில் இணைந்து, கம்பீரை காணவில்லை, கடைசியாக ஜிலேபி சாப்பிட்டபோது பார்த்தது.. என்று அதில் விமர்சனம் செய்யப்பட்டது.

ஒப்பந்தம்
இந்த நிலையில், கம்பீர், இன்று இதுபற்றி விளக்கம் அளித்துள்ளார். காற்று மாசு குறித்த கூட்டம் மிகவும் முக்கியமானதுதான். ஆனால், இப்போட்டிக்கு வர்ணனை செய்வதற்காக, கடந்த ஜனவரி மாதமே ஒப்பந்தமாகி விட்டேன். மேலும், நான் அரசியலில் இணைந்தது ஏப்ரல் மாதத்தில். ஒப்பந்தத்தை மீற முடியாது என்பதால் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் என்னால் கலந்து கொள்ள முடியாது என்பதையும் நான் முன்பே தெரியப்படுத்தினேன்.

ஜிலேபி சாப்பிடுவதில்லை
நான் ஜிலேபி சாப்பிட்டதால்தான் டெல்லியில், மாசு அதிகரித்திருந்தால், நான் இனிமேல் ஜிலேபியே சாப்பிடாமல் விட்டுவிடுகிறேன். என்மீது கவனம் செலுத்துவதை மாசுவை குறைப்பதில் ஆம் ஆத்மி அரசு, செலுத்தியிருந்தால் மக்கள் நிம்மதியாக சுவாசித்திருக்க முடியும். இவ்வாறு கவுதம் கம்பீர் தெரிவித்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications