இவ்வளவு கோடியா? குஜராத் சட்டசபை தேர்தலில் தான் அதிக பணம் பறிமுதல்.. தேர்தல் ஆணையம் ஷாக் தகவல்
டெல்லி: சமீபத்தில் நடந்து முடிந்த 11 சட்டசபை தேர்தல்களின்போது மொத்தம் ரூ.3,400 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் அதிக பணம் என்பது குஜராத்தில் தான் சிக்கி உள்ளது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
லோக்சபா தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று அறிவித்தார். டெல்லியில் இன்று இந்திய தேர்தல் ஆணையத்தின் அலுவலகத்தில் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்ததார்.

அப்போது மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தலுக்கான தேதி என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்ட தேர்தல் என்பது ஏப்ரல் 19 ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு 45 நாட்கள் கழித்து ஜுன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அன்றைய தினம் தான் ஒட்டுமொத்த லோக்சபா தேர்தல் ரிசல்ட் வெளியாக உள்ளது.
இந்நிலையில் தான் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பின்போது தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளும் அமலாக்கத்துறை மூலம் கண்காணிக்கப்படும் என தெரிவித்தார். மேலும் தேர்தலில் இலவசம் மற்றும் பணப்பட்டுவாடா தடுப்பதில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றி விரிவாக தெரிவித்தார்.
இந்த சமயத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த 11 சட்டசபை தேர்தல்களில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்த தகவலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 2022-23 ம் ஆண்டில் இந்தியாவில் ராஜஸ்தான், நாகலாந்து, தெலுங்கானா, குஜராத், மத்திய பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா, திரிபுரா, மிசோராம், சத்தீஸ்கர், மேகாலாயா ஆகிய 11 மாநிலங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த 11 மாநிலங்களில் இருந்து தேர்தல் வேளையில் மொத்தம் ரூ.3,400 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்ச பணம் என்பது குஜராத் மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அங்கு மொத்தம் ரூ.802 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த முந்தைய சட்டசபை தேர்தலை ஒப்பிடும்போது 2,847 சதவீதம் அதிகமாகும்.
அதற்கு அடுத்தப்படியாக தெலுங்கானாவில் ரூ.778 கோடி, ராஜஸ்தானில் ரூ.704 கோடி, கர்நாடகாவில் ரூ.384 கோடி,
மத்திய பிரதேசத்தில் ரூ.332 கோடி, மிசோரமில் ரூ.123 கோடி, சத்தீஸ்கரில் ரூ.78 கோடி, மேகலாயாவில் ரூ.74 கோடி, நாகலாந்தில் ரூ.50 கோடி, திரிபுராவில் ரூ.45 கோடி, ஹிமாச்சல பிரதேசத்தில் ரூ57 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications