Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரயிலில் ஸ்பெஷல் சாப்பாடு.. பயணிகளுக்கு சிறப்பு நவராத்திரி உணவு.. ஆன்லைனில் எப்படி பெறுவது? மகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பொதுமக்களின் நன்மைக்காக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை இந்திய ரயில்வே செய்து வரும் நிலையில், நவராத்திரி பண்டிகையையொட்டி நாடு முழுதும் 150 ரயில் நிலையங்களில் சிறப்பு உணவை அறிமுகப்படுத்துகிறது. இந்த அறிவிப்பானது பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.

இந்துகளின் திருவிழாவான நவராத்திரி வடமாநிலங்களில் மிகவும் சிறப்பாக கொண்டாடுவது வழக்கமாகும்.. அந்தவகையில், நவராத்திரி விழாவை முன்னிட்டு ரயில் பயணிகளுக்கு சிறப்பு நவராத்திரி விரத உணவை இந்திய ரயில்வே நிர்வாகம் வழங்குகிறது.

irctc navratri special meal indian railway

அதுமட்டுமல்லாமல், விசேஷமான சில கோயில்களுக்கு அருகில் உள்ள ரயில் நிலையங்களில் ரயில்களை நிறுத்தவும் இந்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது... இந்த நவராத்திரி நாட்களில், ரயில் பயணிகளுக்கு விரத நாளில் உண்ணும் சைவ உணவையும் ஏற்பாடு செய்து தருகிறது. இது தொடர்பாக இந்திய ரயில்வே அமைச்சகம் செய்தி குறிப்பு வெளியிட்டிருக்கிறது.

இணையதளம்: அதில், "நவராத்திரியையொட்டி பண்டிகையை கொண்டாட ரயிலில் பயணிப்பவர்களின் வசதிக்காக நவராத்தரி சிறப்பு உணவை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐஆர்சிடிசி நாடு முழுதும் சென்னை, லக்னோ, பாட்னா, செகந்திராபாத், ஜலாந்தர், திருப்பதி, ஐதராபாத்,பெங்களூரு, மும்பை, கோல்கட்டா டில்லி உள்ளிட்ட 150 பெருநகரங்களில் உள்ள ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்த ஏற்பாடு செய்துள்ளது. இதற்கென இணையதளம், செயலி வாயிலாக ஆர்டர் செய்து பெற்றுள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.. வழக்கமாக நவராத்திரியின்போது பயணம் செய்யும் பயணிகளுக்கு இத்தகைய உணவை ரயில்வே நிர்வாகம் ஒவ்வொரு வருடமும் வழங்கி வருகிறது. அந்தவகையில், இந்த வருடமும் இந்த சிறப்பு அறிவிப்பு வந்துள்ளது. நவராத்திரி பண்டிகைக்காக, இந்த சிறப்பு விரத உணவு சிறப்பாக தயாரிக்கப்படுவதுடன், தரம் மற்றும் ஊட்டச்சத்து குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாம்.

சிறப்பு சாப்பாடு: கிழக்கு மத்திய ரயில்வே மண்டல அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட தகவலின்படி, பாட்னா சந்திப்பு, மும்பை சென்ட்ரல், டெல்லி சந்திப்பு, சூரத், ஜெய்ப்பூர், லக்னோ, லூதியானா, துர்க், சென்னை சென்ட்ரல், செகந்திராபாத், உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட நிலையங்களில் நவராத்திரி சிறப்பு சாப்பாடு கிடைக்கும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

அதேபோல, அமராவதி, ஹைதராபாத், திருப்பதி, ஜலந்தர் சிட்டி, உதய்பூர் நகரம், பெங்களூரு கான்ட், புது தில்லி, தானே, புனே, மங்களூர் மத்திய நிலையம் ஆகியவற்றிலும் நவராத்திரி ஸ்பெஷல் சாப்பாடு கிடைக்கும். ஆன்லைனிலும் மொபைல் ஆப் மூலமாகவும் பயணிகள் இந்த வசதியைப் பெறலாம்.

இ-கேட்டரிங்: இந்திய ரயில்வேயின் நவராத்திரி ஸ்பெஷல் சாப்பாட்டை ஆர்டர் செய்ய வேண்டுமானால், பயணிகள் ஐஆர்சிடிசி (IRCTC) செயலிக்குச் சென்று, அவர்களின் PNR எண்ணை டைப் செய்து விரத உணவுக்கு ஆர்டர் கொடுக்கலாம். ரயில்வேயின் இ-கேட்டரிங் தளத்திற்குச் சென்றும் ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+