Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குகள் எப்படி எண்ணப்படும்? முடிவுக்கு பின் என்ன நடக்கும்? 10 தகவல்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இன்று நடைபெறும் இந்திய குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும்? அதன் பின்னர் நடக்கப்போகும் நிகழ்வுகள் குறித்த தகவல்களை பார்ப்போம்.

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நிறைவடைவதை ஒட்டி நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 18 ஆம் தேதி நடைபெற்றது. லோக்சபா மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்கள், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் எம்.எல்.ஏக்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்தனர்.

 How President election votes has been calculated? What happened after result?

குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்த 10 தகவல்கள்:

1. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பணிகள் தயாராக உள்ள நிலையில் பலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றத்தில் வாக்குப் பெட்டிகள் திறக்கப்பட்டு காலை 11 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன.

2. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான முடிவுகள் மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3. வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் வாக்குகள் தனித்தனியாக பிரிக்கப்படும்.

4. ஒவ்வொரு எம்.பிக்களின் வாக்கு மதிப்பு 700 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எம்.எல்.ஏக்களின் வாக்கு மதிப்பு அவர்களின் மாநிலத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

5. குடியரசுத் தலைவர் தேர்தலை பொறுத்தவரை அதிக வாக்குகளை பெறுபவர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்பட மாட்டார். குறிப்பிட்ட ஒதுக்கீட்டைவிட அதிக வாக்குகளை பெறுபவரே வெற்றிபெறுவார். வேட்பாளர்களுக்கு விழும் வாக்குகளை 2 ஆக வகுத்து அத்துடன் "1" ஐ சேர்ப்பதன் மூலம் ஒதுக்கீடு நிர்ணயிக்கப்படுகிறது. இந்த கணக்கீட்டில் அதிக வாக்குகளை பெறுபவரே வெற்றியாளர்.

6: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு 44 கட்சிகளின் ஆதரவும், எதிர்க்கட்சி வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவுக்கு 34 கட்சிகளின் ஆதரவும் உள்ளன. இந்த 34 கட்சிகளை சேர்ந்த எம்.பி, எம்.எல்.ஏக்களில் சிலரும் திரௌபதி முர்முவுக்கு வாக்களித்துள்ளனர்.

7. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் திரௌபதி முர்மு வெற்றிபெற்றால் அவரை ஜவஹர்லால் நேரு வசித்த டீன் முர்தி மார்க் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்திப்பார்.

8. திரௌபதி முர்மு வெற்றிபெற்றவுடன் அவரை பாஜக தலைமையகத்திலிருந்து டெல்லி ராஜ்பாத் வரை பேரணியாக அழைத்து செல்ல அக்கட்சி திட்டமிட்டுள்ளது. இதில் பல மூத்த தலைவர்கள் பங்கேற்பார்கள்.

9. திரௌபதி முர்முவின் வெற்றியை கொண்டாடுவதற்காக அனைத்து மாநில பாஜக நிர்வாகங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. முர்முவின் சொந்த ஊரான ஒடிசாவின் ராய்ரங்பூரில் 20,000 இனிப்புகள் தயாரிக்கப்பட்டு, பழங்குடியினர் நடனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

10. குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளர் வரும் 25 ஆம் தேதி இந்தியாவின் 15 வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்பார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+